சேலம் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் சமூக நல அலுவலகத்தில் ஓராண்டு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய பாதுகாப்பு அலுவலர் தேர்வு செய்யப்பட உள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
![ரூ.30,000 சம்பளத்தில் அரசு வேலை..!! விண்ணப்பிப்பது எப்படி.?? முழு விவரம் இதோ...](https://1newsnation.com/wp-content/uploads/2021/09/7-million-jobs-can-disappear-by-2050-study-1579691557.jpg)
கல்வித்தகுதி : M.A. Sociology/ Social Work / psychology with Computer knowledge
வயது வரம்பு : பொது பிரிவினருக்கு அதிகபட்சமாக 30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டு பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி : விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான நபர்கள் https://salem.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பங்கள் : பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன், “மாவட்ட சமூக நல அலுவலகம் மாவட்ட ஆட்சியர் வளாகம், அறை எண் 126” என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.
நேர்காணல் : 05.11.2022 அன்று மாலை 6.00 மணிக்குள் வரும் விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியான நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கு அழைப்பு அனுப்பப்படும். மேலும், விவரங்களுக்கு 0427-2413213 என்ற மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.