இரவு பகலாக வேறு நபர்களிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்த காதல் மனைவியை கணவன் அடித்துக் கொலை செய்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் திருமாஞ்சி நகரில் வசித்து வருபவர் ஜான்ராஜ். இவரது மகன் இம்மானுவேல் அப்துல்லா (32). கூலித் தொழிலாளியான இவருக்கு கன்னித்தாய் (30) என்ற மனைவி இருந்தார். இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு செய்யது அலி பாத்திமா (4), கஜிதா பிஸ்மி (3) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி கன்னிதாயை இம்மானுவேல் அப்துல்லா அடித்துக் கொலை செய்துவிட்டு, தப்பியோடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்த நிலையில், சூசை நகர் காட்டுப்பகுதியில் மறைந்திருந்த அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
![’பேருக்குதான் நான் புருஷன்’..!! எந்நேரமும் ஃபோன்லயே பேசிட்டு இருக்கா..!! காதல் மனைவிக்கு நேர்ந்த சம்பவம்..!!](https://1newsnation.com/wp-content/uploads/2021/03/Talking-on-Smartphone-660x430-1.jpg)
அவரிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில், ”எனது மனைவியை நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அவள் கடந்த சில நாட்களாக இரவு, பகல் பார்க்காமல் எந்நேரமும் செல்போனில் வேறுநபர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். இதனை நான் கண்டித்தேன். எனது பேச்சைக் கேட்காமல் அவர் தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்தாள். இதனால் ஆத்திரம் அடைந்த நான், மனைவி கன்னிதாயை அடித்துக் கொலை செய்துவிட்டேன்” என்று கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், இம்மானுவேலுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.