fbpx

’பேருக்குதான் நான் புருஷன்’..!! எந்நேரமும் ஃபோன்லயே பேசிட்டு இருக்கா..!! காதல் மனைவிக்கு நேர்ந்த சம்பவம்..!!

இரவு பகலாக வேறு நபர்களிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்த காதல் மனைவியை கணவன் அடித்துக் கொலை செய்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் திருமாஞ்சி நகரில் வசித்து வருபவர் ஜான்ராஜ். இவரது மகன் இம்மானுவேல் அப்துல்லா (32). கூலித் தொழிலாளியான இவருக்கு கன்னித்தாய் (30) என்ற மனைவி இருந்தார். இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு செய்யது அலி பாத்திமா (4), கஜிதா பிஸ்மி (3) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி கன்னிதாயை இம்மானுவேல் அப்துல்லா அடித்துக் கொலை செய்துவிட்டு, தப்பியோடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்த நிலையில், சூசை நகர் காட்டுப்பகுதியில் மறைந்திருந்த அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

’பேருக்குதான் நான் புருஷன்’..!! எந்நேரமும் ஃபோன்லயே பேசிட்டு இருக்கா..!! காதல் மனைவிக்கு நேர்ந்த சம்பவம்..!!

அவரிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில், ”எனது மனைவியை நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அவள் கடந்த சில நாட்களாக இரவு, பகல் பார்க்காமல் எந்நேரமும் செல்போனில் வேறுநபர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். இதனை நான் கண்டித்தேன். எனது பேச்சைக் கேட்காமல் அவர் தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்தாள். இதனால் ஆத்திரம் அடைந்த நான், மனைவி கன்னிதாயை அடித்துக் கொலை செய்துவிட்டேன்” என்று கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், இம்மானுவேலுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Chella

Next Post

பெரும் சோகம்..!! நவரச நாயகனுக்கு இப்படி நிலைமையா..? மருத்துவர்கள் சொன்ன அந்த ஒரு காரணம்..!!

Thu Dec 15 , 2022
80, 90-களில் ரசிகர்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்திக். இவரது சிரிப்பு, குறும்புத்தனமான நடிப்பு பலரையும் ரசிக்க வைத்தது. அந்த காலத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு ஒரு சரியான போட்டியாக திகழ்ந்தார் கார்த்திக். அதுமட்டுமின்றி காமெடியிலும் கைதேர்ந்தவர் இவர். கவுண்டமணியுடன் இவர் இணைந்து நடித்த காமெடி படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் […]
பெரும் சோகம்..!! நவரச நாயகனுக்கு இப்படி நிலைமையா..? மருத்துவர்கள் சொன்ன அந்த ஒரு காரணம்..!!

You May Like