கோவை மாவட்டம் அங்களக்குறிச்சியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன், கூலித் தொழிலாளியான கிருஷ்ணன் (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் செல்போன் எண்ணை பகிர்ந்து மணிக்கணக்கில் பேசி வந்துள்ளனர். இதனால், இருவருக்கும் இடையேயான பழக்கம் நெருக்கமானது.
ஒருகட்டத்தில் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று ஜாலியாக இருந்துள்ளார். பின்னர், அந்த சிறுமியை தனது உறவினர் வீட்டிற்கு அந்த இளைஞர் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை கட்டாயப்படுத்தி இரண்டு நாட்களாக ஆசை தீர உடலுறவு வைத்துள்ளார்.
இதற்கிடையே, வீட்டில் சிறுமியை காணாததால், அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், சிறுமி கிருஷ்ணனுடன் தான் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கிருஷ்ணன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அங்கு விரைந்த போலீசார், சிறுமியை பத்திரமாக மீட்டனர். பின்னர், சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கிருஷ்ணனை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.