fbpx

டிவியை பழுது நீக்கி தராததால் மெக்கானிக் கொலை..!! ஆம்புலன்ஸை ஏற்றிக்கொன்ற டிரைவர் பகீர் வாக்குமூலம்..!!

விருதுநகரில் ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்ட நிலையில், குற்றவாளியின் வாக்குமூலம் போலீசாரையே அதிரவைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன் சங்கரலிங்கம் (42). இவர் பட்டம்புதூரில் டிவி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், சங்கரலிங்கம் பட்டம் புதூரில் இருந்து R.R. நகரில் உள்ள உணவகத்துக்கு சாப்பிட சென்று விட்டு திரும்பி தன்னுடைய இருச்சக்கர வாகனத்தில் பட்டம்புதூர் நோக்கி சென்று உள்ளார். அப்போது பட்டம் புதூர் அருகே உள்ள அக்ரஹாரப்பட்டி விளக்கில் சங்கர் சென்ற இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சங்கர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

டிவியை பழுது நீக்கி தராததால் மெக்கானிக் கொலை..!! ஆம்புலன்ஸை ஏற்றிக்கொன்ற டிரைவர் பகீர் வாக்குமூலம்..!!

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வச்சக்காரப்பட்டி போலீசார், சங்கரலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் விபத்து வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்திய வச்சக்காரப்பட்டி போலீசார், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது சங்கரலிங்கத்தின் இருச்சக்கர வாகனத்தின் மீது ஆம்புலன்ஸ் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த ஆம்புலன்ஸின் பதிவெண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த ஆம்புலன்ஸ் பட்டம்புதூர் அருகே உள்ள ராமசாமிபுரத்தை சேர்ந்த முருகன் (31) என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் முருகனை பிடித்து விசாரணை செய்ததில் டிவி மெக்கானிக் சங்கரலிங்கத்தை ஆம்புலன்ஸை ஏற்றி கொலை செய்ததாக வாக்குமூலமாக அளித்துள்ளார்.

டிவியை பழுது நீக்கி தராததால் மெக்கானிக் கொலை..!! ஆம்புலன்ஸை ஏற்றிக்கொன்ற டிரைவர் பகீர் வாக்குமூலம்..!!

முருகன் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், தனது டிவியை பழுது பார்த்துக் கொடுக்க சங்கரலிங்கத்திடம் 1500 கொடுத்ததாகவும், ஆனால் பல நாட்களாகியும் சங்கரலிங்கம் டிவியை பழுது நீக்கி கொடுக்காமலும், கொடுத்த 1500 ரூபாயை திரும்பிக் கொடுக்காமலும் இருந்ததால், ஆத்திரத்தில் சங்கரலிங்கத்தின் மீது ஆம்புலன்ஸை ஏற்றி கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்தது போலீசாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் வச்சக்காரப்பட்டி போலீசார் விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி முருகனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

வெளியில் செல்லும்போது பொது-கழிவறையை பயன்படுத்துபவரா நீங்கள்? சிறுநீர் தொற்று ஏற்படலாம்!!!

Fri Nov 18 , 2022
மக்கள் வெளியே பயணத்தை மேற்கொள்ளும் போது பொது-கழிவறையை பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனா‌ல் சிறுநீர் தொற்று ஏற்படக்கூடும். இதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டிய சில வழிகள் இங்கே காணலாம். சில சமயங்களில் பொதுக் கழிவறைகளில் தண்ணீர் கூட இல்லாமல் இருக்கும். மேலும் சில மாதங்களில் சுத்தமும் செய்யப்படுவதில்லை. இந்த நிலையில், நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது தொற்று ஏற்படுவதைத் தடுக்கிறது. டிஷ்யூ பேப்பரை எடுத்து கொண்டு, உங்கள் விரலை முழுமையாக […]

You May Like