fbpx

’அய்யோ காப்பாத்துங்க’..!! தூங்கிக் கொண்டிருந்த 80 வயது மூதாட்டி மீது பாய்ந்த நபர்..!! பலாத்கார முயற்சியால் பரபரப்பு..!!

80 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே கம்பூரை சேர்ந்தவர் மூதாட்டி பேச்சியம்மாள் (80). இவர், தனது வீட்டில் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த நபர் திடீரென மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். அப்போது, மூதாட்டி அலறி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் ஓட்டி வந்த நிலையில், ஆட்கள் வருவதை கண்டவுடன் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். பின்னர், மயக்க நிலையில் இருந்த மூதாட்டியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அதே ஊரைச் சேர்ந்த பாண்டி (55) என்பவர் மூதாட்யை பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்துள்ளனர். 80 வயது முதாட்டியை 55 வயது நபர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

திருமண பார்ட்டியில் DJ பாடல்..!! விருந்தினர்களுக்கு தர்ம அடி கொடுத்த ஓட்டல் ஊழியர்கள்..!! நடந்தது என்ன?

Mon Feb 27 , 2023
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தின் மசூரி பகுதியில் செயல்படும் பிரபல ஓட்டலில் திருமண பார்ட்டி நடந்தது. ஓட்டலுக்கு வந்தவர்கள் இரவு சுமார் 2 மணியளவில் ‘DJ’ பாடலுக்கு ஆட்டம் போட வேண்டும் என்று விரும்பியுள்ளனர். அதற்காக ஓட்டல் உரிமையாளரிடம் ‘டிஜே’ பாடலை ஒலிபரப்பச் செய்யும்படி கேட்டனர். ஆனால், அவர் டிஜே பாடலை ஒலிபரப்பச் செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விருந்தினர்களுக்கும், ஓட்டல் உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியது. தொடர்ந்து […]

You May Like