fbpx

காதலன் ஏமாற்றியதால் பிளஸ்2 மாணவி தீக்குளித்து தற்கொலை..! வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல்..!

காதலன் ஏமாற்றியதால் மனமுடைந்த பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர், வீட்டில் தனியாக இருந்த போது தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது, மாணவி எரிந்துகொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள், மாணவியை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர். ஆனால், மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

காதலன் ஏமாற்றியதால் பிளஸ்2 மாணவி தீக்குளித்து தற்கொலை..! வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல்..!

மேலும், உயிரிழப்பதற்கு முன்பாக மாணவி மரண வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், தான் முனிரத்தினம் என்பவரை காதலித்ததாகவும், அவர் திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் மாணவி வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், உயிரிழந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

உப்பள தொழிலாளர்களுக்கு ரூ.5000 நிவாரண உதவி திட்டம்.. முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

Fri Aug 12 , 2022
உப்பளத் தொழிலாளர்களுகான நிவாரண திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட நெய்தல் உப்பு என்ற பெயரில் வெளிச்சந்தைக்கு உப்பு விற்பனை திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.. பின்னர் உப்பள தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.5000 நிவாரண உதவி வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.. உப்பு உற்பத்தி இல்லாத வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், […]

You May Like