fbpx

பழக்கடையில் தந்தைக்கு உதவியாக இருந்த சிறுமி பாலியல் பலாத்காரம்….

காஞ்சிபுரத்தில் பழக்கடைக்கு சென்றுவந்தபோது ஆட்டோ ஓட்டுனரால் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே அம்பேத்கர் ரயில் நிலையம் அருகில் பழக்கடை வைத்திருப்பவர் தன் மனைவியுடன் விவகாரத்தாகி தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூத்த பெண் தந்தையுடனும் இளைய பெண் தாயுடனும் வாழ்ந்து வருகின்றார்கள். மூத்த பெண்ணுக்கு 12 வயதாகும். தன் தந்தைக்கு உதவியாக பழக்கடையில் வேலை பார்த்திருக்கின்றார். அப்போது எதிரில் ஒரு ஆட்டோ ஸ்டாண்ட இருந்துள்ளது. அதில் 26 வயதான ரஞ்சித் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி காதலித்து வந்துள்ளார். நாளடைவில் சிறுமியும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

தனியாக அழைத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றார். இதை வீட்டில் யாருக்கும் அவர் தெரிவிக்கவில்லை. இதனால் அவர் கர்ப்பமும் ஆனார். பின்னர் தந்தை அறிந்து கொண்டார். எனவே தாயிடம் கொண்டுபோய் விட்டுள்ளார். தாய்க்கு இந்த தகவல் தெரியாது என கூறப்படுகின்றது.

இதனிடையே காஞ்சிபுரத்தில் தந்தையின் வீட்டருகே படித்து வந்த சிறுமி டி.சி வாங்கிக் கொண்டு வேறொரு பள்ளியில் சேர்க்கப்பட்ட நலையில் 13ம் தேதி வயிற்று வலி என கூறி வீட்டுக்குச் சென்றார். மருத்துவர்க் சோதனை செய்தபோது கர்ப்பமானது தெரியவந்துள்ளது. அப்போது குழந்தை சுகப்பிரசவத்தில் ஆண்குழந்தை பிறந்துள்ளது.

அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தாய் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Post

’மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன்கள் தள்ளுபடி’..!! அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!!

Mon Oct 17 , 2022
அடுத்த ஒரு வார காலத்திற்குள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் கூட்டுறவு வங்கியின் புதிய கிளை திறந்து வைத்து பேசிய அவர், ”மிக நெருக்கடியான இந்த பகுதியில் கூட்டுறவு வங்கி அமைக்கப்பட்டிருப்பது இந்த வட்டாரத்தில் இருக்கக்கூடிய மகளிருக்கு பல வகையில் பயன் அளிக்கும். சுய உதவி குழு கடனை ரத்து செய்வது தொடர்பாக […]
’மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன்கள் தள்ளுபடி’..!! அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!!

You May Like