fbpx

நேற்று புதுமாப்பிள்ளை .. இன்று மாமியார் வீடு …

சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே நிழற்குடையில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டுவது போல் வீடியோ வெளியான விவகாரத்தில் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பள்ளி மாணவிக்கு தாலி கட்டும் வீடியோ நேற்று வைரலானது. பள்ளி சீருடையில் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்த மாணவிக்கு மாணவர் மஞ்சள் கயிறு மூலம் தாலி கட்டும் வீடியோ நேற்று பேசு பொருளாக இருந்தது. பள்ளி படிக்கும் வயதில் மாணவர்களின் இது போன்ற செயல் பிற பெற்றோர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றது. நேற்று புதுமாப்பிள்ளையாக இருந்த நிலையில் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பெராம்பட்டு பகுதியைச் சேர்ந்த தலமேடு கிராமத்தை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி என்பது உறுதியானது. தாலி கட்டிய மாணவன் சிதம்பரம் அருகே வடகரிராஜ புரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து மாணவனை கைது செய்து குழந்தை திருமண தடைச்சட்டத்தின் கீழ் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.

Next Post

கோவில் பெயரில் போலி இணையதளத்தில் லட்சக்கணக்கில் வசூல் ….உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்…

Tue Oct 11 , 2022
தமிழக கோவில்களின் போலியான பெயர் மூலம் வசூல் வேட்டைநடத்தி வரும் கும்பலுக்கு வேட்டுவைக்கும் வகையில் உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவில் இனி போலி இணையதளங்கள் செயல்படாதவாறு முடக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. தமிழகங்களில் ஏராளமான பிரபலமான கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் திருமணம் , சுப நிகழ்ச்சிகள் , 60ம் கல்யாணம் போன்றவை நடத்தப்படுகின்றன. இவற்றில் இணையதளம் மூலம் வசூல்செய்யும் முறையும் உள்ளது. கட்டணத்தை இணையதளத்தில் செலுத்திவிட்டு நிகழ்ச்சிகள் நடத்திக் கொள்ளாலாம். […]
இந்த மாவட்டத்திற்கு வரும் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!! மாவட்ட நிர்வாகம் உத்தரவு..!!

You May Like