வாரத்தின் ஐந்து நாட்களிலும் வர்த்தகம் இயங்கும் நிலையில் தீபாவளி அன்று தேசிய பங்குச்சந்தை மற்றும் கமோடிட்டி சந்தை ஆகியவற்றிற்கு பொது விடுமுறை ஆனால் தீபாவளியை ஒட்டி சிறப்பு வர்த்தகமாக முஹுரத் வர்த்தகம் ஒரு மணி நேரம் செயல்படும்.
தீபாவளி முஹுரத் வர்த்தக நாளில் வர்த்தகத்தை தொடங்குவது ஆண்டு முழுவதும் செழிப்பையும் செல்வத்தை தருவதாக நம்பிக்கை உள்ளது. எனவே அந்நாளில் புதிய பங்குகளை வாங்குபவர்கள் அதிக ஆர்வத்துடன் பங்குகளை வாங்குவார்கள். எனவே இந்த ஆண்டு எந்த நேரம் முஹுரத் வர்த்தகம் நடைபெறும் என்பதை பார்க்கலாம்.
உள்நாட் பங்குச் சந்தைகளான பி.எஸ்.இ. மற்றும் தேசிய பங்குச்சதை நிப்டி சிறப்பு ’முஹுரத் ’ வர்த்தகம் வருகின்ற அக்டோபர் 24ம் தேதி மாலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை நடத்தும் . பிளாக் மாலை 5 .45 முதல் 6 மணி வரை பிளாக் டீல் அமர்வு நடைபெறும். ப்ரி ஓபனிங் மார்க்கெட் என கூறப்படும் திறப்புக்கு முன்பான சந்தை அமர்வு 6 மணி முதல் 6.08 வரை நடைபெறும். எனவே இந்த நேரத்தில் நாம் பங்குகளை வாங்கலாம்.
தீபாவளி அன்று பங்குகளை வாங்கினால் செல்வ செழிப்பை தரும் என நம்பப்படுவதால் அமர்வின் போது சந்தை பங்கேற்பாளர்கள் சில பங்குகளை வாங்க விரும்புவதால் தீபாவளிக்கு சிறந்த நேரம் அமைக்கப்படுகின்றது.
எந்த பங்குகளை வாங்கலாம் ? : பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ் , சிப்லா , ஹீரோ மோட்டோ கார்ப் , ஐசிஐசிஐ வங்கி , அல்ட்ராடெக் சிமெண்ட் , போன்ற நிறுவனங்களின் பங்குகளை வாங்கலாம் என நிர்மல் பேங்க் என்ற தரகு நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
அஜந்தா பார்மா, பாட்டா இந்தியா , சிசிஎல் தயாரிப்புகள் , ஃபெடல் பேங்க் , ஜே.கே. லட்சுமி சிமெண்ட்ஸ் , ஐனாக்ஸ் லெய்சர், லா ஓபலா போன்ற பங்குகளையும் வாங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அடுத்த 12 மாதங்களில் 28 சதவீதம் வரை ஆக்சிஸ் செக்யூரிட்டி என்ற பங்கு லாபம் வழங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது தவிர IDFC First Bank, Westlife Development, ITC, Sundaram Finance, Ashok Leyland, Aptus Value Housing Finance India, Indian Hotels Company, Nocil , Polycab என்ற பங்கும் நல்ல லாபம் கிடைக்கும் பங்குகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.