“அவ்வளவு தொகுதிகள் தரமுடியாது..” தேமுதிகவிடம் ‘NO’ சொன்ன திமுக..! கூட்டணி பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?

stalin premalatha

2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது..


இதில் பாமகவின் அன்புமணி அணி என்.டி.ஏ கூட்டணியில் சேர்ந்துள்ளது. டிடிவி தினகரனும் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துள்ளார்.. எனினும் தேமுதிக தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.. திமுக, அதிமுக என இரு கட்சிகளுடனும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அதன்படி பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் 20 சட்டமன்ற தொகுதி, ஒரு ராஜ்யசாப் சீட் ஆகியவற்றை தேமுதிக கேட்டதாக கூறப்படுகிறது.. எனினும் திமுக தரப்போ 4 முதல் 5 தொகுதிகள் வரை தான் கொடுக்க முடியும் என்று கூறிவிட்டதாம்.. தற்போது 12 தொகுதிகளையாவது கொடுங்கள் என தேமுதிக இறங்கி வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது..

எனினும் தற்போதைய கூட்டணி கட்சிகளை விட தேமுதிகவுக்கு அதிக சீட் கொடுக்க வாய்ப்பில்லை எனவும் திமுக திட்டவட்டமாக கூறிவிட்டதாம்.. அதே போல் தேமுதிகவுக்கு அதிக தொகுதிகளை கொடுத்தால் அது திமுக கூட்டணியில் தேவையற்ற சலசலப்பை ஏற்படுத்தும் என்றும் திமுக கூறியதாகவும் தெரிகிறது.. இதனால் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் தேமுதிகவை விட அதிக தொகுதிகளை கேட்கும் என்றும் திமுக கருதுகிறதாம்..

எனவே தேமுதிகவை விட தற்போது இருக்கும் கூட்டணி கட்சிகள் தான் முக்கியம் எனவும் திமுக நினைக்கிறதாம்.. எனவே தேமுதிகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்க முடியும் என்று திமுக உறுதியாக கூறவிட்டதாம்.. இதனால் திமுக – தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது..

Read More : 3 முறை முதல்வர்.. ஜெயலலிதாவின் நம்பிக்கை பெற்றவர்..! 2026 தேர்தலில் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்.. இதற்கு என்ன காரணம்?

RUPA

Next Post

குழந்தைகளுக்கு மொபைல் போன்களை கொடுக்காதீங்க..! இது வாழ்க்கையில் நீங்கள் செய்யும் மிகப்பெரிய தவறாக இருக்கும்!

Fri Jan 30 , 2026
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது காட்டும் அன்பு எல்லையற்றது. தங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக எதை வேண்டுமானாலும் செய்ய பெற்றோர் தயாராக இருக்கின்றனர்… இருப்பினும், இந்த நாட்களில் பெற்றோர்கள் செய்யும் ஒரு தவறு, அவர்களின் குழந்தைகளுக்கு ஒரு பெரிய சாபமாக மாறி வருகிறது. அது அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களை நரகத்திற்கு இழுத்துச் செல்கிறது. அந்தத் தவறு, தங்கள் குழந்தைகளுக்கு மொபைல் போன்களை கொடுப்பதுதான். அது ஏன் ஒரு பெரிய தவறு […]
Children Mobile Addiction

You May Like