EX.அதிமுக அமைச்சர்கள், இபிஎஸ் உறவினர் உள்ளிட்ட 7 பேர் மீது ED வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.. திமுக MP மனு..!

admk ex minister

திமுக மாநிலங்களவை எம்பி கிரிராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், கேசி வீரமணி, சி, காமராஜ், கே.பி அன்பழகன் மற்றும் இபிஎஸ் உறவினர் சேலம் இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ சத்யநாராயணன் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரி குறிப்பிட்டுள்ளார்.


மேலும் தனது மனுவி; “ எஸ்.பி. வேலுமணி அமைச்சராக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.. அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த தங்கமணி, சி. விஜயபாஸ்கர், கே.பி அன்பழகன், கே.சி வீரமணி உள்ளிட்டோர் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்குகளில் குற்றம் செய்தவர்கள் ஊழல் குற்றத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது.. இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் அனுப்பப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.. லஞ்சஒழிப்புத்துறை சேகரித்துள்ள ஆவணங்கள் அடிப்படையில் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய முடியும்..

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்குகள் உள்ளதால் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது..” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த 7 பேர் மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Read More : Flash : திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு.. இழுபறிக்கு பின் ஒப்பந்தம் கையெழுத்தானது..!

RUPA

Next Post

சூப்பர் நியூஸ்..! இந்த தேதி வரை ஆதார் விவரங்களை இலவசமாக அப்டேட் செய்யலாம்..! மத்திய அரசு அறிவிப்பு..!

Wed Mar 18 , 2026
ஆதார் அட்டை பயனர்களுக்கு மத்திய அரசு ஒரு நற்செய்தியை அறிவித்துள்ளது. ஆதார் அட்டையில் உள்ள பயோமெட்ரிக் விவரங்களை இலவசமாகப் புதுப்பிப்பதற்கான வாய்ப்பை அது வழங்குகிறது. இந்தச் சலுகை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். ஆனால், இது குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும். 5 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் தங்கள் ஆதார் அட்டையின் பயோமெட்ரிக் விவரங்களை இலவசமாகப் புதுப்பித்துக்கொள்ளலாம். இதற்காக UIDAI எந்தவிதக் கட்டணத்தையும் வசூலிக்காது. பொதுவாக, பயோமெட்ரிக் விவரங்களைப் […]
Aadhaar 2025

You May Like