வரும் நாட்களில் கோடை வெப்பம் அதிகரிக்கும் என்பதால், அதில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிமுறைகளை வானிலை மையம் வெளியிட்டுள்ளது..
நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.. இந்நிலையில் ஏப்ரல் முதல் இந்தியாவின் பல இடங்களில் இயல்பான வெப்ப அலை ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. கோடை காலமாக கருதப்படும் ஏப்ரல் முதல் ஜூன் வரை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பான வெப்பநிலையை விட அதிக வெப்பநிலை இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது..
தமிழகத்திலும் வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ள வானிலை மையம், பொதுமக்கள் கோடை வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகளையும் வெளியிட்டுள்ளது.. அதன்படி, அவசியமின்றி காலை 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். தாகம் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும்… தளர்வான, பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.. வெளியே செல்லும்போது கையில் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்லுங்கள்.
மதிய நேரத்தில் வெளியே குழந்தைகளை விளையாட விடவேண்டாம். வெளியில் செல்லும் போது மயக்கம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுங்கள். அடிக்கடி எலுமிச்சை சாறு, இளநீர் போன்ற நீராகாரங்களை அருந்தவும் என்று தெரிவக்கப்பட்டுள்ளது. குளிர்ந்த இடத்திலிருந்து திடீரென வெப்பமான இடத்துக்கு வருவோருக்கு அதிக ஆபத்து உள்ளது. அவ்வாறு குளிர்ச்சியான பகுதிகளில் வாழ்பவர்கள் கோடையில் சொந்த ஊர்களுக்கு வரும் போது வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்..” என்று தெரிவித்துள்ளது..