நாட்டில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய – மாநில அரசுகள் மானிய விலையில் ரேஷன் கடைகள் மூலம் உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றன. அந்த வகையில், அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தமாக 35,083 ரேஷன் கடைகள் உள்ள நிலையில், 2 கோடியே 25 லட்சத்து 24 ஆயிரத்து 784 குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடியே 3 லட்சத்து 68 ஆயிரத்து 572 பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த மாதத்தில் (ஜூன்) ரேஷன் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல, மாதத்தில் முதல் 2 வெள்ளிக்கிழமைகளும் ரேஷன் கடைகள் மூடப்பட்டிருக்கும். அதேபோல், 3-வது மற்றும் 4-வது வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை ஆகும்.
இதனைத் தவிர்த்து, வரும் 7ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால், அன்றைய தினமும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜூன் மாதம் மொத்தமாக 5 நாட்களுக்கு ரேஷன் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் ரேஷன் பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More : உங்களுக்கும் ரூ.1,000 உரிமைத்தொகை வேணுமா..? அப்படினா இந்த வேலையை முதலில் முடிங்க..!! புது ரூல்ஸ்..!!