தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை ரூ.1,000 உதவித் தொகை பெறாத தகுதியுள்ள பெண்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. பலர் புதிய ரேஷன் கார்டு பெற்றிருந்தாலும், சிலர் முன்பு விண்ணப்பித்தும், தகுதியுடன் இருந்தும் ரூ.1,000 பெற முடியாமல் இருந்தனர். இந்நிலையில், அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணி ஜூன் 4ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. எனவே, தமிழ்நாட்டில் மொத்தம் 9,000 இடங்களில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ள நிலையில், தேவையான ஆவணங்களை (ஆதார், ரேஷன் கார்டு, வங்கி கணக்கு விவரம் போன்றவை) சமர்பித்து விண்ணப்பிக்கலாம். அரசு தரப்பில் இந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதி இருந்தால், உங்கள் வங்கிக் கணக்கிற்கு ரூ.1,000 நேரடியாக வரவு வைக்கப்படும்.
ரூ.1,000 பெற தகுதிகள் என்னென்ன..?
குடும்பத்தில் நீங்கள் தான் தலைவியாக இருக்க வேண்டும். அதாவது, ரேஷன் அட்டையன் தலைவன் என்ற லிஸ்ட்டில் வருபவர்களின் மனைவியாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், கணவர்கள் இல்லாத வீட்டில் மூத்த பெண்ணுக்கு பணம் வழங்கப்படும்.
உங்களின் வங்கி கணக்கு ஆதாருடனும், செல்போன் நம்பருடனும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆண்டுக்கு இரண்டரை லட்சத்திற்கு மேல் வருமானம் பெற்றால், இத்திட்டத்தின் பலன் உங்களுக்கு கிடையாது. வருமான வரி செலுத்துபவராக இருந்தாலும், உங்களுக்கு பணம் கிடைக்காது. ஒரு ரேஷன் கார்டில் உள்ள ஒரு பெண்ணுக்கு மட்டுமே பணம் கிடைக்கும்.
இதற்காக இரண்டாவது பெண், தனி ரேஷன் வாங்கினாலும் ரூ.1,000 கிடைக்காது. ஏனென்றால், ஒரே வீட்டில் இருந்தால் சோதனையின்போது பணம் தரக்கூடாது என்று முடிவு எடுக்கப்படும். ஒரே வீட்டில் இரண்டு ரேஷன் இருந்தால் அதில் இரண்டாவது ரேஷன் நீக்கப்பட்டு, பணம் வழங்கப்படாது. அரசின் பென்ஷன் தொகையை வாங்கிக் கொண்டிருந்தால் கட்டாயம் உங்களுக்கு ரூ.1,000 கிடைக்காது. புதிதாக திருமணமாகி ரேஷன் கார்டு பெற்றவர்கள், அரசு ஊழியராக இல்லாத பட்சத்தில் அவருக்கு ரூ.1,000 வழங்கப்படும்.
Read More : வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த இந்தியன் வங்கி..!! இனி ஜிஎஸ்டியுடன் புதிய கட்டணம் வசூல்..!!