சாமி கும்பிடும்போது கண்ணீர் வருகிறதா?. என்ன அர்த்தம் தெரியுமா?

prayer cry

சாமி கும்பிடும்போது சிலருக்குக் கொட்டாவி வருவதையும், கண்ணீர் வருவதையும் பார்த்திருப்போம். சில சமயங்களில் சாமி சிலையிலிருந்து பூ விழுவது, மணியோசை கேட்பது போன்ற விஷயங்களும் நடைபெறும். இதற்கான பலன்கள் என்னவென்பதை இந்தப் பதிவில் காண்போம்.


கோயிலுக்குச் செல்வதற்கான முக்கியமான காரணம், நம் குறைகளை கடவுளிடம் சொல்லவும், நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறினால், அதற்கான பரிகாரத்தைச் செய்யவுமே செல்வோம். இன்னும் சிலர் மனநிம்மதி தேடி கோயிலுக்குச் செல்லும் வழக்கம் உண்டு. அவ்வாறு கோயிலில் இறைவனை வழிபடும்போது சிலருக்குக் கண்ணீர் வந்துவிடும். இதற்கான காரணமாக சொல்லப்படுவது என்னவென்றால், இறைவனுக்கும் உங்களுக்கும் ஒரு ஆழமான பிணைப்பு இருந்தாலும், இறைவனுக்கும் உங்களுக்கும் ஒரு உன்னதமான உறவிருந்தால் மட்டுமே கண்களில் இருந்து கண்ணீர் வரும் என்று சொல்லப்படுகிறது.

தன்னை மீறிய ஒன்று தனக்குள் நிகழ்வதை உணர்கையில், கண்ணீர் வழிந்தோடும். இதை அனுபவிக்க மட்டுமே முடியும், ஆராயவோ, விவரிக்கவோ முடியாது.மனசோர்வு, அமைதியற்ற நிலையில் இருக்கும் போது நாம் கடவுளை அதிகமாக வேண்டுகிறோம். கோயிலுக்குச் செல்ல முயற்சி செய்கிறோம். மன உளைச்சல் காரணமாகவே சிலர் கோயிலுக்குச் செல்ல விரும்புகின்றனர். அப்படி நீங்கள் மனமுடைந்து கடவுளை வேண்டும்போது நம் கண்களில் இருந்து கண்ணீர் வரும். அதன் அர்த்தம் என்ன தெரியுமா? உங்களுக்கு பிடித்த கடவுளை நீங்கள் வழிபடும் பொழுது உங்களை அறியாமலேயே உங்கள் கண்களில் இருந்து கண்ணீர் வரும். அதற்கு அர்த்தம் கடவுள் உங்களுக்கு ஏதோ குறிப்பைச் சொல்கிறார். அதாவது கடவுள் உங்களிடம் ஒரு குறிப்பை கொடுக்கிறார் என்று பொருள். அவற்றை நீங்கள் புரிந்து கொண்டால் அந்தப் பிரச்சனை நீங்கிவிடும்.

உங்கள் வேண்டுகோளை கடவுள் ஏற்றுக் கொண்டார் என்று பொருள், கண்களில் இருந்து கண்ணீர் வந்தால் உங்களது பிரார்த்தனை வெற்றிகரமாக முடிந்துவிட்டது. உங்களது கோரிக்கையை கடவுள் ஏற்றுக்கொண்டார். இனி எல்லா பிரச்சனையும் நீங்கி, உங்கள் ஆசைகள் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.

Readmore: திங்கள் கிழமையில் இந்த பொருட்களை வாங்கினால் அதிர்ஷ்டம் கொட்டும்!. மறந்தும்கூட வாங்கக்கூடாத பொருட்கள் இதோ!.

KOKILA

Next Post

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்!. இன்று லெஜண்ட் S.P.பாலசுப்ரமணியம் பிறந்தநாள்!

Wed Jun 4 , 2025
1946ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கொனேட்டம்பட்டுவில் பிறந்தவர் எஸ்பிபி. எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்பிபி என்றும், பாலு என்றும் மக்களிடையே பிரபலமான அவரின் முழுப்பெயர் ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் ஆகும். அவரது பெற்றோர் பெயர் எஸ் பி சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா. சிறு வயது முதலே இசையுடன் வளர்ந்தார் எஸ்பிபி. பொது நிகழ்ச்சிகளிலும் பாடி பரிச்சயம் பெற்றார். முறையான சாஸ்திரீய சங்கீதம் கற்கவில்லை என்றாலும் […]
HBD SPB 11zon

You May Like