ரூபே ஏடிஎம் கார்டு வைத்துள்ளவர்களுக்கு காப்பீடு தொகையாக ரூ.5 லட்சம் வரை கிடைக்கும். அதை எப்படி பெறுவது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஒருவருக்கு வங்கிக் கணக்கு இருந்தாலே அவருக்கு விபத்து காப்பீடு கிடைக்கிறது. ஏடிஎம் கார்டுகளை வழங்கும் வங்கிகளே காப்பீடுகளை வழங்குகின்றன. அந்த காப்பீடுகள் ஏடிஎம் கார்டுகள் வழங்கும் போதே, அதனுடனே வழங்கப்படுகின்றன. இதன் மூலமாக ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்கள் சாலை விபத்துகளில் நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அல்லது இறந்துவிட்டாலோ, காப்பீட்டு கோரி அவரது நாமினி விண்ணப்பிக்கலாம்.
கிளாசிக் ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வரையும், பிளாட்டினம் ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் வரையும், சாதாரண மாஸ்டர் கார்டு வைத்திருந்தால் ரூ.50,000 வரையும் காப்பீட்டுத் தொகையை பெற முடியும். அதேபோல், பிளாட்டினம் மாஸ்டர் கார்டு வைத்திருந்தால், ரூ.5 லட்சம் வரையும், விசா கார்டு வைத்திருந்தால் ரூ.1.50 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையும் காப்பீடு தொகை கிடைக்கும். இதை உங்கள் நாமினி பெற்றுக் கொள்வார்.
அதேபோல், பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் கணக்கு துவங்கி, ரூபே கார்டு வைத்துள்ள நபரின் நாமினி, இறந்தவரின் பெயரில் ரூ.1 முதல் 2 லட்சம் வரை காப்பீடு கோரி விண்ணப்பிக்க முடியும். ரூ.5 லட்சம் வரை காப்பீடு பெற முடியும். ரூபே கார்டை பொறுத்தவரை விபத்தில் சிக்கியவருக்கு ரூ.50,000 கவரேஜ் வழங்கப்படுகிறது. விபத்தில் இரண்டு கைகள் அல்லது கால்கள் இழந்தால், ரூ.1 லட்சம் காப்பீடு தரப்படுகிறது.
ஏடிஎம் காப்பீடு பெறுவது எப்படி..?
ஏடிஎம் கார்டுதாரரின் நாமினி சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று காப்பீட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஏடிஎம் கார்டின் இலவச காப்பீட்டை விபத்தின் எப்ஐஆர் நகல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான ஆவணம் உள்ளிட்ட விவரங்களை வங்கியில் சமர்பித்து காப்பீடுத் தொகை பெற விண்ணப்பிக்க முடியும். இதுதான் நடைமுறையாகும்.
இதில் முக்கியமான நிபந்தனை என்னவென்றால், ஒருவர் இறப்பதற்கு 45 நாட்களுக்கு முன்பு ‘ரூபே கார்டை’ பயன்படுத்தி ஏதேனும் ஒரு பரிவர்த்தனை செய்திருக்க வேண்டும் என முன்னதாக நிபந்தனை இருந்தது. ஆனால், தற்போது 30 நாட்களுக்கு முன்பாக ஒரு பரிவர்த்தனை செய்திருக்க வேண்டும். இப்படி பரிவர்த்தனை செய்தவர்களின் குடும்பத்தினர், தாராளமாக விபத்து காப்பீடு கோரி வங்கியிடமும், காப்பீட்டு நிறுவனத்திலும் விண்ணப்பிக்கலாம்.
Read More : ஏசி அறைக்குள் இந்த தவறுகளை செய்தால் பெரும் ஆபத்து..!! உடல்நலம் கடுமையாக பாதிக்கும்..!! மக்களே உஷார்..!!