கடந்த 1992ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட திட்டம் தான், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம். ஒவ்வொரு பெண்ணும் தரமான கல்வியைத் தொடரவும், பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பெண் குழந்தைகள் பள்ளி சேர்க்கையை அதிகரிப்பது மற்றும் குறைந்தபட்சம் இடைநிலைக் கல்வியை ஆவது முடிடிக்க வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், ஒற்றைப் பெண் குழந்தை உள்ள குடும்பங்களுக்கு நிலையான வைப்புத் தொகையாக ரூ.50,000 குழந்தைகளின் பெயரில் வரவு வைக்கப்படும். அதாவது, குழந்தை 18 வயதை எட்டும் வரை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்திட்டம் புதுப்பிக்கப்படும். 18 வயது முடிந்ததும் வட்டியுடன் சேர்த்து முழு தொகையையும் பெற முடியும்.
அதேபோல், ஒரு குடும்பத்தில் 2 பெண்கள் குழந்தைகள் இருந்தால், ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். பெண் குழந்தைகளின் கல்வி செலவுக்கு உதவும் வகையில், 6-வது வயதில் இருந்து ஆண்டுதோறும் ரூ. 1,800 ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த முயற்சி பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்க உதவுகிறது.
அதே சமயம், ஒரு குடும்பத்தில் 3 பெண் குழந்தைகள் இருந்தால், ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ. 25,000 வழங்கப்படும். அவர்களின் மொத்த வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். இது பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு ஆதரவு சென்றடைவதை உறுதி செய்கிறது. இத்திட்டம் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற வேண்டுமென்றால், அருகில் உள்ள ஈ சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.