உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருக்கா..? தமிழ்நாடு அரசின் ரூ.50,000 உதவித்தொகையை மிஸ் பண்ணிடாதீங்க..!!

money e1749025602177

கடந்த 1992ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட திட்டம் தான், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம். ஒவ்வொரு பெண்ணும் தரமான கல்வியைத் தொடரவும், பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பெண் குழந்தைகள் பள்ளி சேர்க்கையை அதிகரிப்பது மற்றும் குறைந்தபட்சம் இடைநிலைக் கல்வியை ஆவது முடிடிக்க வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இத்திட்டத்தின் கீழ், ஒற்றைப் பெண் குழந்தை உள்ள குடும்பங்களுக்கு நிலையான வைப்புத் தொகையாக ரூ.50,000 குழந்தைகளின் பெயரில் வரவு வைக்கப்படும். அதாவது, குழந்தை 18 வயதை எட்டும் வரை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்திட்டம் புதுப்பிக்கப்படும். 18 வயது முடிந்ததும் வட்டியுடன் சேர்த்து முழு தொகையையும் பெற முடியும்.

அதேபோல், ஒரு குடும்பத்தில் 2 பெண்கள் குழந்தைகள் இருந்தால், ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். பெண் குழந்தைகளின் கல்வி செலவுக்கு உதவும் வகையில், 6-வது வயதில் இருந்து ஆண்டுதோறும் ரூ. 1,800 ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த முயற்சி பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்க உதவுகிறது.

அதே சமயம், ஒரு குடும்பத்தில் 3 பெண் குழந்தைகள் இருந்தால், ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ. 25,000 வழங்கப்படும். அவர்களின் மொத்த வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். இது பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு ஆதரவு சென்றடைவதை உறுதி செய்கிறது. இத்திட்டம் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற வேண்டுமென்றால், அருகில் உள்ள ஈ சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.

Read More : கணவன் – மனைவி போல் குடித்தனம்..!! ஆசை தீர உல்லாசம்..!! ஜன்னல் வழியாக பார்த்த பக்கத்து வீட்டுக்காரருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

CHELLA

Next Post

துபாய் டிராவல்ஸ் ஓனருக்கு முடிவு எழுதிய கள்ளக்காதலி..!! காட்டுக்குள் கிடந்த கள்ளக்காதலனின் உடல்..!! வழக்கில் திடீர் திருப்பம்..!!

Wed Jun 4 , 2025
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் விளாத்தி ஊரைச் சேர்ந்தவர் சிகாமணி. இவர் துபாயில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் நிலையில், இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சிகாமணிக்கு துபாயில் ஓட்டலில் வேலை பார்த்து வந்த கோவையை சேர்ந்த சாரதா என்ற பெண்ணுடன் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து, சாரதாவிடம் சிகாமணி ரூ.6 லட்சம் வரை பணம் வாங்கியுள்ளார். மேலும், இதுதொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சாரதாவை சிகாமணி […]
Thiruvarur 2025

You May Like