மயில் இறகுகள் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் மயில் இறகு கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். மயில் தோகை வைத்து சில காரியங்களை செய்தால் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம். யில் தோகையில் கருப்பு நூலை கட்டி கைப்பையிலோ, பணப்பையிலோ வைத்துக் கொண்டால், பணம் அதிகம் சேர்வதுடன், நஷ்டம், கடன் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்கும். ஏதேனும் பணப் பிரச்சனைகள் இருப்பின் வீட்டின் தென்கிழக்கு பகுதியிலோ அல்லது பணம் உள்ள இடத்திலோ மயில் தோகைகளை வைக்க வேண்டும். இது நிதி சிக்கலை தீர்க்கும்.
கெட்ட கனவுகள் வந்தாலோ அல்லது அடிக்கடி கனவுகளால் தொந்தரவு ஏற்பட்டாலோ, இரவில் படுக்கும் முன் உங்கள் தலையணையின் கீழ் மயில் இறகை வைத்தால் அதுபோன்ற கனவுகள் வருவதில்லை. வீட்டின் பிரதான வாயிலில் விநாயகர் சிலையுடன் மயில் இறகுகளை வைத்தால் பெரும் தோஷம் நீங்கும் அதே நேரத்தில் வீட்டிலுள்ள அனைத்து வகையான எதிர்மறை ஆற்றலும் விலகும்.
வீட்டில் உள்ள சிலைகள், பூஜை அறைகளை சுத்தம் செய்ய எப்போதும் மயில் தோகை பயன்படுத்துவது நல்லது. இது முன்னோர்களின் ஆசீர்வாதத்தை அளிப்பதாக நம்பப்படுகிறது. அதோடு வீட்டில் உள்ள கடன் பிரச்னைகளும் விலகும். தடைபட்ட வேலைகளையும் எளிதாக முடிக்க முடியும்.
நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் தலையணைக்கு அடியில் மயில் தோகை வைப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது உங்கள் குடும்பத்தில் அன்பை அதிகரிக்கும். திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைக்கு கல்வியில் ஆர்வம் இல்லை என்றால், மயில் தோகை பாடப்புத்தகத்தில் வைத்தால், குழந்தையின் கல்வியில் ஆர்வம் ஏற்படலாம்.
Readmore: ஆமை மோதிரம் நல்லது தான்.. ஆனால் இந்த ராசிக்காரர்கள் அணிந்தால் ரொம்ப கெட்டது..!!