படுக்கையில் ரீல்ஸ் பார்க்கும் பழக்கமா..? உங்களுக்கு இந்த பிரச்சனையெல்லாம் வரப்போகுது..!! மருத்துவர்கள் எச்சரிக்கை..!!

smartphone

இன்றைய நவீன உலகில், சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராம் ரீல்களை பார்ப்பதில் அதிக நேரத்தை செலவிடாமல் ஒரு நாள் கூட கடப்பதில்லை என்ற நிலை வந்துவிட்டது. நாள் முழுவதும் ரீல்களை ஸ்வைப் செய்யும் பழக்கம், இரவில் படுக்கைக்கு சென்ற பிறகும் தொடர்கிறது. இருப்பினும், படுக்கையில் படுத்தபடி தொடர்ந்து மொபைல் திரையைப் பார்ப்பது, உடலில் பல கடுமையான உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். தூங்கும் நேரத்தில் உங்கள் மொபைலை ஸ்க்ரோல் செய்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை அனைவரும் தெரிந்துகொள்வது அவசியம்.


படுக்கையில் படுத்துக்கொண்டு மொபைல் போனை பார்க்கும்போது, நமது கழுத்து, தோள்கள் மற்றும் உடலின் நிலை இயல்புக்கு மாறாக வளைகிறது. நீண்ட நேரம் இந்த நிலையில் ரீல்களைப் பார்ப்பது, தசைகளில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி, டெக்ஸ்ட் நெக் சிண்ட்ரோம் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. அமெரிக்க ஆஸ்டியோபதி சங்கத்தின் கூற்றுப்படி, நீண்ட நேரம் படுத்திருக்கும்போது மொபைல் பார்ப்பது, கழுத்து எலும்புகளில் கிட்டத்தட்ட 27 கிலோ எடையை ஏற்படுத்துகிறது. இதனால்தான் காலையில் எழுந்ததும் பலருக்குத் தோள்பட்டை மற்றும் கழுத்து வலி ஏற்படுகிறது.

படுத்துக்கொண்டு ரீல்ஸ் பார்ப்பது நேரடியாக தூக்கத்தைத் தடுக்கிறது. மொபைல் திரையில் இருந்து வெளியாகும் நீல ஒளி (Blue Light), தூக்கத்தைத் தூண்டும் ஹார்மோனான மெலடோனின் சுரப்பைத் தடுக்கிறது. ‘JAMA நெட்வொர்க் ஓபன் 2023’ ஆய்வின்படி, இந்தப் பழக்கம் உள்ளவர்களின் தூக்கத்தின் தரம் மற்றவர்களை விட மோசமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வழக்கம் தொடரும்போது, அது தீவிரமான தூக்கமின்மை (Insomnia) போன்ற கடுமையான பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கலாம்.

மொபைல் போன்களில் இருந்து வெளிப்படும் நீல ஒளி கண்களைச் சோர்வடையச் செய்து, அதன் செல்களைச் சேதப்படுத்துகிறது என்று அமெரிக்க தேசிய கண் நிறுவனம் எச்சரிக்கிறது. இதனால் கண் எரிச்சல், வறட்சி மற்றும் தலைவலி போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. லைட்டுகளை அணைத்துவிட்டு ரீல்களை பார்ப்பவர்களிடையே இந்த கண் பிரச்சனைகள் இன்னும் அதிகமாகக் காணப்படுகின்றன.

அதேபோல், ரீல்களைப் பார்க்கும்போது மூளையில் டோபமைன் என்ற மகிழ்ச்சியான ஹார்மோன் வெளியிடப்படுகிறது. இது தற்காலிக மகிழ்ச்சியை அளித்தாலும், தொடர்ந்து ரீல்களைப் பார்ப்பது டோபமைன் போதைப்பழக்கத்தை அதிகரிக்கிறது. அதிகப்படியான திரை நேரம் பதட்டம், மனச்சோர்வு மற்றும் கவனச்சிதறல் அபாயங்களை அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த ஆபத்துகளில் இருந்து விடுபட, தினசரித் திரை நேரத்தை 1 மணி நேரத்திற்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், படுக்கைக்குச் செல்வதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பே மொபைல் போனை ஒதுக்கி வைப்பது மிக அவசியம். படுத்துப் பார்ப்பதற்குப் பதிலாக அமர்ந்து திரையைப் பார்ப்பது நல்லது. ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் கண்களுக்கு ஓய்வு கொடுப்பது, அத்துடன் யோகா மற்றும் உடற்பயிற்சிகளை செய்வது ஆரோக்கியத்தை பேண உதவும்.

Read More : நடைபயிற்சியில் இப்படி ஒரு அதிசயமா..? பின்னோக்கி நடந்தால் இத்தனை நன்மைகளா..? ‘ரெட்ரோ வாக்கிங்’ பற்றி தெரியுமா..?

CHELLA

Next Post

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! டிச.1ஆம் தேதி முதல் இந்த சேவை முற்றிலும் நிறுத்தம்..!! SBI வங்கி அதிரடி அறிவிப்பு..!!

Mon Nov 17 , 2025
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI), தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான சேவை மாற்றத்தை அறிவித்துள்ளது. எஸ்பிஐ-யின் ஆன்லைன் வங்கிச் சேவை தளமான OnlineSBI மற்றும் மொபைல் செயலியான YONO Lite ஆகியவற்றில் கிடைக்கும் mCASH எனப்படும் உடனடிப் பணப் பரிமாற்ற சேவை, வரும் டிசம்பர் 1 முதல் நிரந்தரமாக நிறுத்தப்பட உள்ளது. இந்த mCASH சேவை, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் தேவையில்லாமல், பெறுநரின் […]
SBI 2025

You May Like