சனியின் கெடு பார்வையை நீக்கும் ஏகாம்பரேஸ்வரர் கோவில்.. எங்க இருக்கு தெரியுமா..?

temple mint

சென்னை மிண்ட் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் ஆலயம், பஞ்சபூத தலங்களில் பூமித் தலமாக விளங்குகிறது. இந்த பழமையான சிவாலயத்தில், அம்பாளுக்கு எதிரே சனீஸ்வரர் வீற்றிருப்பது என்பது இத்தலத்தின் தனிச்சிறப்பு. எனவே, இத்தல அம்மனை வழிபட்டால் சனி தோஷத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.


இக்கோவிலில் உள்ள சப்தநாக உருவத்தில், முன்புறம் விநாயகர் மற்றும் பின்புறம் முருகன் அருள்பாலிப்பதும் மற்றொரு ஆச்சர்யமான அம்சமாகும். 1680களில், ஆங்கிலேய ஆட்சி காலத்தில், அலங்காரநாத பிள்ளை என்ற சிவபக்தர் இக்கோவிலைக் கட்டியதாக வரலாறு கூறுகிறது. அவரின் தீவிர பக்திக்காக, ஒருநாள் காஞ்சிபுரம் சென்று கொண்டிருந்தபோது சிவனும் உமையம்மையும் காட்சி தந்து, “இனிமேல் காஞ்சிக்கு வர தேவையில்லை, நானே இங்கு நிலை கொண்டிருப்பேன்” எனக் கூறியதால், அந்த இடத்திலேயே கோயில் கட்டப்பட்டது என தல புராணம் குறிப்பிடுகிறது.

மூலவர், லிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாக தரிசனமளிக்கிறார். இங்குள்ள அம்பாள், சிவன் மீது நின்ற கோலத்தில் காட்சி தருவதும், அம்மனே பிரதானமாக வழிபடப்படுவதும் இந்த ஆலயத்தின் சிறப்பாகும். ஸ்ரீசக்கரம், அம்பாளின் பாதத்திலுள்ளதும், “சிவனில் சக்தி அடக்கம்” எனும் உண்மையை உணர்த்துவதாக கூறப்படுகிறது.

ஏழு நிலை ராஜகோபுரம் கொண்ட இக்கோவில், காமிக ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது. நவகிரக தோஷ நிவாரண தலம், வீடு வாங்க விரும்புவோர், திருமண தடை நீக்கம் உள்ளிட்ட பல்வேறு பரிகாரங்களுக்காகவும் இந்த ஆலயம் புகழ்பெற்றது. தலவிருட்சமாக மாமரம் இருக்கின்றது. இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தில் செயல்பட்டு வருகின்ற இக்கோவில், முக்கிய ஆலய பட்டியலில் அடங்கியுள்ளது.

Read more: உத்தராகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பால் கனமழை.. 2 பேர் பலி.. 7 பேர் காயம்..!!

Next Post

கணவர் இரண்டு மனைவிகளை விட்டு இறந்துவிட்டால்.. ஓய்வூதியம் யாருக்கு கிடைக்கும்..? 

Mon Jun 30 , 2025
அரசு வேலைகளில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதியம் மிகவும் முக்கியமானது. சராசரியாக 60 வயதில் அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஒவ்வொருவரும் தங்கள் எதிர்காலம், வேலைக்குப் பிறகு தங்கள் குடும்பத்திற்கு என்ன நடக்கும், செலவுகள் எவ்வாறு சமாளிக்கப்படும் போன்றவற்றைப் பற்றி கவலைப்படுகிறார்கள். எனவே, ஒவ்வொரு அரசு ஊழியரும் இதைக் கருத்தில் கொண்டு குடும்ப ஓய்வூதியத்திற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். இதனால் அவர் எந்த காரணத்திற்காகவும் இறந்தாலும், குடும்பம் வாழ முடியும். ஆனால் […]
man two wife 1739788231 1

You May Like