மாதந்தோறும் அன்னாபிஷேகம் நடைபெறும் அபூர்வ சிவன் கோயில்.. எங்க இருக்கு தெரியுமா..?

shiva temple 1

திருவாரூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது விளமல் பதஞ்சலி மனோகர் திருக்கோவில். பொதுவாக, சிவாலயங்களில் ஐப்பசி மாத பெளர்ணமியில் மட்டுமே லிங்கத்திற்கான அன்னாபிஷேகம் நடக்கின்றது. ஆனால் இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும், குறிப்பாக அமாவாசை நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது, இதுவே இத்தலத்தின் சிறப்பு அடையாளம்.


கோயில் சிறிய கோபுரத்துடன் அமைந்திருந்தாலும், அதன் ஆன்மிக சக்தி மிகுந்தது. கோயிலின் எதிரே அமைந்துள்ள தீர்த்தம் “அக்னி தீர்த்தம்” என்று அழைக்கப்படுகிறது. கோபுர வாயிலின் இருபுறமும் விநாயகர் மற்றும் முருகன் சிற்பங்கள் வீற்றிருப்பது பக்தர்களை ஈர்க்கின்றது. கோயில் முன் மண்டபத்தில் பதஞ்சலி முனிவரின் திரு உருவம் காட்சியளிக்கிறது.

வியாக்ரபாத முனிவர், சூரியன் போன்றோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. அவர்களின் சன்னிதியும் கோயிலில் காணப்படுகின்றது. இறைவன் கிழக்கு நோக்கி மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தீப வழிபாட்டின் போது, தீபம் லிங்கத்தில் பிரதிபலிகிறது.

இங்கு வேண்டுதல் நிறைவேறியவர்கள் சிவனுக்கு அன்னம் படைத்து வழிபடும் பழமையான வழக்கம் தொடர்கிறது. முன்னோர்களுக்காக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் அமாவாசை நாளில் இக்கோயிலுக்கு வந்து வழிபடுகின்றனர். அக்னி தீர்த்தத்தில் நீராடி, பதஞ்சலி மனோகரருக்கு அன்னாபிஷேகம் செய்து, முன்னோர்களின் மோட்சம் பெறும் தீபம் ஏற்றப்படுகிறது.

ஐதீக நம்பிக்கையின் படி, அமாவாசையில் விளக்கேற்றி வழிபட்டால் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைந்து தலைமுறை சிறக்க ஆசீர்வாதம் தருவார்கள். தீராத நோயால் அவதிப்படுபவர்கள், அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்தால் சிறந்த பலன்கள் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

பதஞ்சலி முனிவர் தனது உடலை பாம்பாகவும், வியாக்ரபாதர் தனது கால்களை புலிக்கால்களாக மாற்றி கமலாம்பாளை வணங்கி வழிபட்டனர். மணலில் லிங்கம் செய்து வழிபட்டதும், சிவபெருமானின் அஜபா நடனம் மற்றும் திருவடி தரிசனம் அவர்களுக்கு அருளப்பட்டது. இதனால் இக்கோயில் “பதஞ்சலி மனோகர் திருக்கோவில்” என்ற பெயர் பெற்றது.

இத்தலம் சாதாரண கோயில் அல்ல; இது பிறவித் தொடர்களை முடித்து ஆன்ம நிம்மதி பெற வழிகாட்டும், முன்னோர்கள் ஆசீர்வாதமும் சிவபெருமானின் திருவடியும் அருளும் திருவடி தலம் ஆகும். வாழ்க்கையின் சிக்கல்களில் தடுமாறும் பக்தர்களுக்கு இத்தலம் ஆன்மிக ஒளி, நிம்மதி மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதம் வழங்கும் அபூர்வ இடமாக விளங்குகிறது.

Read more: இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் விமான நிலையம்.. பிரதமர் மோடியால் திறந்து வைத்தார்!

English Summary

Do you know where the rare Shiva temple is located where Annabhishekam is held every month?

Next Post

உஷார்!. உலகின் மிக ஆபத்தான 10 உணவுகள் இவைதான்!. உயிருக்கே ஆபத்தானது!. தவறுதலாக கூட சாப்பிட்டுவிடாதீர்கள்!

Thu Oct 9 , 2025
உலகில் இயற்கையாகவே நச்சுத்தன்மை வாய்ந்த பல உணவுகள் உள்ளன. அவற்றை முறையாக சமைக்காமல் முறையற்ற முறையில் சாப்பிடுவது மரணத்திற்கு கூட வழிவகுக்கும். உலகில் சுவையாகத் தோன்றும் பல உணவுகள் உள்ளன, ஆனால் தவறுதலாக சாப்பிட்டாலும் அவை உயிருக்கு ஆபத்தானவை. இந்த உணவுகளில் சில இயற்கையாகவே நச்சுத்தன்மை வாய்ந்தவை, இது முறையற்ற சமையல் அல்லது மோசமான சுத்தம் காரணமாக ஏற்படுகிறது. பல நாடுகளில், இந்த உணவுகள் பாரம்பரிய உணவின் ஒரு பகுதியாகும், […]
most dangerous foods

You May Like