கடிதம் மூலம் நடராஜரிடம் குறைகளை சொல்லும் அபூர்வ கோவில்.. எங்க இருக்கு தெரியுமா..?

nataraja temple

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே அமைந்துள்ள அழகிய திருச்சிற்றம்பலமுடையான் கோவில், தமிழகத்தில் மிகுந்த பக்தி மற்றும் மரபு வழிபாடுகளால் கவனம் பெறும் ஒரு முக்கிய நடராஜர் தலமாக விளங்குகிறது. இக்கோவிலின் தனிச்சிறப்பாக, பக்தர்கள் தங்களது கோரிக்கைகளை கடிதமாக எழுதி, நடராஜருக்குப் பத்திரமாக சமர்ப்பிக்கும் வழிபாட்டு மரபு நடைமுறையில் உள்ளது.


இந்த கோவிலில் ‘மனுநீதி முறைப்பெட்டி’ என அழைக்கப்படும் ஒரு பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை தாளில் எழுதி, அந்த பெட்டிக்குள் போட்டு, அருகிலுள்ள ஆராய்ச்சி மணியை மூன்று முறை அடித்து, இறைவனிடம் நீதி கோரும் விசித்திர வழிபாடு செய்துவருகின்றனர்.

இதன்பின், தீட்சிதர்கள் அந்த கடிதங்களை ரகசியமாக வாசித்து, இறைவனிடம் சமர்ப்பித்துவிட்டு, அவற்றை உடனடியாக தீயில் எரிக்கும் மரபும் உள்ளது. இது, பக்தரும் இறைவனும் மட்டுமே அறிந்திருக்கும் ஒரு ஆன்மிக உரையாடல் என கருதப்படுகிறது. பொதுவாக, கோரிக்கைகள் நிறைவேறும் போது, அதே பக்தர்கள் மீண்டும் கோவிலுக்கு வந்து, நன்றி கடிதமாக எழுதுவதும் வழக்கமாக உள்ளது.

கோவிலின் மற்ற முக்கிய அம்சங்கள்:

* 10 அடி உயரமும், 8 அடி அகலமும் கொண்ட நடராஜர் சிலை.

* அருகில் ஏழு அடி உயர அம்பிகை (அம்மன்) அருள்பாலிக்கிறார்.

* வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி முனிவர் நேரடியாக மூலஸ்தானத்தில் காட்சியளிக்கின்றனர்.

* இங்கு திருமூலர் நாயன்மார் காட்சி தருகிறார்; மற்ற கோவில்களைப் போல மாணிக்கவாசகர் அல்ல.

* பைரவர், பத்து கரங்களுடன் தசபுஜ பைரவராக உள்ளார். இது மிகவும் அரிதானது.

* நவகிரக மண்டபம் ஒரே கல்லால் செதுக்கப்பட்டு, மத்தியில் சூரியன் மற்றும் எட்டு திசைகளில் மற்ற கிரகங்கள் தவக்கோலத்தில் உள்ளனர்.

* பஞ்ச சபைகள் தவிர, இங்கு ஆறாவது சபையாக ‘பளிங்கு சபை’ அமைந்துள்ளது.

* நாயன்மார்களுக்கு தனி சன்னதிகள் உள்ளன; இதனை “திருத்தொண்டர் திருக்கோவில்” என அழைப்பது வழக்கம்.

Read more: 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர்.. போக்சோ சட்டத்தில் கைது..!! சிக்கியது எப்படி..?

Next Post

தொழிலதிபர் அழகப்பன் நில மோசடி வழக்கில் முக்கிய சாட்சி!. நடிகை கௌதமியிடம் 10 மணிநேரம் அமலாக்கத்துறை விசாரணை!

Sat Jul 5 , 2025
ரியல் எஸ்டேட் அதிபரும், பாஜக பிரமுகருமான அழகப்பன், நில மோசடி செய்த வழக்கில் முக்கிய சாட்சியான நடிகை கௌதமியிடம் 10 மணிநேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நடிகை கௌதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் அளித்தார். அதில் அழகப்பன் என்பவரும், அவரது குடும்பத்தினரும் தனது சொத்துக்களை மோசடி செய்து அபகரித்து உள்ளனர். எனவே தனது அசையா சொத்துக்களை பராமரிக்க […]
Alagappan Actress Gautami 11zon

You May Like