வறுமையை நீக்கும் செம்பொன் செய் பெருமாள் கோவில்.. எங்க இருக்கு தெரியுமா..?

temple 2

மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள திருசெம்பொன் செய் பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் 31-வது திவ்ய தேசமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வைணவ மரபில் முக்கிய இடம் பெற்ற இந்தத் தலத்தை திருமங்கையாழ்வார் பெருமைபடுத்தி மங்களாசாசனம் செய்துள்ளார். இக்கோவில், திருநாங்கூர் 11 திருப்பதிகளில் ஒன்றாகும். இது மட்டும் அல்லாது, இராமவதாரம் உடைய ராமர் இத்தலத்தில் தவம் செய்ததால் கூடுதலான ஆன்மிக சிறப்பு பெற்றுள்ளது.


ராவணனை வதம் செய்த பின், திருடநேத்திரர் முனிவரின் ஆலோசனைப்படி, பொன்னால் ஆன பசு ஒன்றை உருவாக்கி, அதன் வயிற்றுப் பகுதியில் நான்கு நாட்கள் தவம் செய்ததாக புராணக் கதை குறிப்பிடுகிறது. பின்னர் அந்த பசுவை ஒரு அந்தணருக்கு தானமாக அளித்து, அதனை விற்ற பொருளால் இக்கோவில் கட்டப்பட்டது. இதனால்தான் இத்தலம் “திருசெம்பொன் செய்” என அழைக்கப்படுகிறது.

சிவபெருமான் தாண்டவம் ஆடிய பின்விளைவாக, உலக அமைதிக்காக மகாவிஷ்ணு 11 ரூபங்களில் காட்சி தந்து, திருநாங்கூரில் 11 இடங்களில் தங்கியதாகக் கூறப்படுகிறது. அந்த 11 திருப்பதிகளில், திருசெம்பொன் செய் கோவில் முக்கியமானது.

கோயிலின் அமைப்பு : சிறிய கோவிலாக அமைந்த இக்கோவிலில் பேரருளாளன் என்ற திருநாமத்துடன், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். உற்சவம் ஹேமரங்கார் அல்லது செம்பொன் ரங்கார் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். தாயார் அல்லிமாமலர் தாயார் என்ற பெயரில் வீற்றிருக்கிறார். கருவறைக்கு எதிரில் கருட மண்டபம் உள்ளது. இதன் அருகில் உள்ள மண்டபத்திலேயே அனைத்து உற்சவங்களும் நடத்தப்படுகின்றன.

எப்போதும் பக்தர்களைக் காத்து அவர்களுடனேயே இருப்பதால் ‘பேரருளாளர்’ என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் அல்லிமாமலர் நாச்சியார், பூதேவியுடன் பெருமாள் அருள்பாலிக்கிறார். திராவிட கட்டிடக் கலை முறையில் கட்டப்பட்டுள்ள இக்கோவிலை பெரியாழ்வார், திருமலிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

வறுமையில் வாடும் பக்தர்கள் இத்தலத்தில் பக்தியுடன் வழிபட்டால் செல்வ வளம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. வேண்டுதல் நிறைவேறும் போது பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, புதிய வஸ்திரம் அர்ப்பணிக்கும் சடங்கும் இங்கு நடைபெறுகிறது. திருசெம்பொன் செய் திருப்பதி, ஆன்மிக மரபின் உயிரோட்டத்தை பெருமையுடன் பரப்பும் ஒரு தெய்வீக தலம் என்றே பக்தர்களால் போற்றப்படுகிறது.

Read more: ‘Chronic Venous Insufficiency’ என்னும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட டிரம்ப்.. அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும்..?

English Summary

Do you know where the Semponsey Perumal Temple, which eliminates poverty, is located?

Next Post

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 70% குறைவை சந்திக்க நேரிடும்!. நிபுணர்கள் கருத்து!

Sat Jul 19 , 2025
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டு பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களின் சேர்க்கை மற்றும் விசா தொடர்பான வழிமுறைகளை வெளியிட்டுள்ளார். இந்த சூழ்நிலையால், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவிற்குச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 70 சதவீதம் குறையக்கூடும் என்று ஹைதராபாத்தைச் சேர்ந்த கல்வி ஆலோசகர்கள் கூறுகின்றனர். இந்த சரிவுக்கு முக்கிய காரணம், அமெரிக்காவால் விசா நியமன இடங்கள் கிடைப்பதைத் தடை செய்திருப்பதும், விசா […]
indian students US 11zon

You May Like