இரு மடங்கு பலன் தரும் இரட்டை ஆஞ்சநேயர்.. கோவில் எங்க இருக்கு தெரியுமா..?

temple 7

தமிழகத்தின் கோவில்கள் அனைவரும் தங்களது தனித்துவத்துடன் பக்தர்களை ஈர்க்கின்றன. விநாயகர், முருகன், விஷ்ணு, சிவன் போன்ற தெய்வங்கள் தனித்தன்மை கொண்டவையாக வழிபடப்படுகின்றன. ஆனால் மயிலாடுதுறை அருகே உள்ள மேலப்பாதி கிராமம் ஒரு அபூர்வமான ஆன்மிக நிகழ்வால் பிரபலமாகியுள்ளது. அங்கு ஒரே ஆலயத்தில் இரட்டை ஆஞ்சநேயர் காட்சி தருவது, பக்தர்களுக்கு அபூர்வமான தரிசன அனுபவமாக இருக்கிறது.


புராணக் கதைகளின் படி, சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு, மேலப்பாதி கிராம மக்கள் காவிரி ஆற்றை கடக்க மூங்கிலால் பாலம் அமைக்க முயன்றனர். அப்போது இரண்டு மனித குரங்குகள் வந்து அவர்களுக்கு உதவி செய்தன. பாலம் அமைந்து முடிந்த பின், அவை அருகிலிருந்த இலுப்பை காட்டில் ஓய்வெடுத்தன. சிறிது நேரத்தில், அவை ஆஞ்சநேயரின் ரூபமாக ஒன்றிணைந்தன என பக்தர்கள் நம்புகின்றனர்.

இந்த நிகழ்வை நினைவுகூரும் விதமாக, கிராம மக்கள் அந்த இடத்தில் இரட்டை ஆஞ்சநேயர் ஆலயத்தை நிறுவினர். மேலப்பாதி ஆலயத்தில் ஒரு முறை வழிபட்டாலே, வேண்டுதல் இரட்டிப்பு பலனுடன் நிறைவேறும் என்று மக்கள் நம்புகின்றனர். பொதுவாக எந்த காரியத்தையும் விநாயகரை வணங்கி தொடங்குவது வழக்கம், ஆனால் இங்கு மக்கள் முதலில் இரட்டை ஆஞ்சநேயரை வணங்கி பிறகே புதிய காரியங்களை தொடங்குவார்கள்.

பக்தர்கள் வெண்ணெய் காப்பு சாற்றி வழிபடுவதை ஒரு முக்கிய வழியாகக் கருதுகின்றனர். அவர்கள் நம்பிக்கையின்படி, “வெண்ணெய் உருகுவது போலவே துன்பங்களும் உருகி மறையும்.” மேலும் இந்த ஆலயத்தில் வழிபாடு, சனி தோஷம் குறையும், நவகிரக தோஷங்களும் விலகும் என மக்கள் நம்புகின்றனர். இதனால், பக்தர்கள் அதிகம் தரிசனை மேற்கொள்ள விரும்புகின்றனர்.

நாமக்கல், சுசீந்திரம் போன்ற இடங்களில் பிரம்மாண்ட ஆஞ்சநேயரை காணலாம். ஆனால் ஒரே இடத்தில் இரட்டை ஆஞ்சநேயரை தரிசிப்பது என்பது மேலப்பாதி ஆலயத்தின் தனித்துவமாகும். இது பக்தர்களுக்கு மட்டும் அல்ல, ஆன்மிக ஆர்வமுள்ள சுற்றுலாபயணிகளுக்கும் அதிசய அனுபவமாகும்.

Read more: கடக ராசியில் குரு.. ஐந்து ராசிகளுக்கு கெட்ட காலம் தொடங்கி விட்டது..!! உஷாரா இருங்க..

English Summary

Do you know where the temple of the double Anjaneya is located, which gives double benefits?

Next Post

Cyclone: அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ‘சக்தி’ தீவிர புயல்... தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை...!

Mon Oct 6 , 2025
தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ‘சக்தி’ தீவிர புயல், குஜராத் மாநிலம் துவாரகாவிலிருந்து மேற்கே 820 கிமீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கக்கூடும். தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. […]
Cyclone 2025 1

You May Like