கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் இவற்றை எல்லாம் தற்காலத்தில் கவனமாக கையாள வேண்டியிருக்கிறது, இக்கால இளைய தலைமுறை, அவற்றின் நல்ல தன்மைகளை அறிய ஆர்வம் காட்டுவதில்லை, என்பதே கசப்பான உண்மையாகும். நம்மிடையே தொன்றுதொட்டு தொடர்ந்து வரும் சில பழக்க வழக்கங்கள் யாவும், நமக்கு சிறந்த தீர்வையே அளித்து வருகின்றன. ஆயினும், அவற்றின் உண்மை நிலையை, இக்கால தலைமுறைகள் அறியும் வண்ணம் நாம்தான், அவற்றை அதிகமாக வெளிப்படுத்திக்கொள்வதில்லை.
இருந்தாலும் இக்கால தலைமுறையினரும், பாரம்பரிய பழக்கங்களை அவர்கள் அறியாமல் தொடர்ந்து செய்து வருகின்றனர், என்பதே உண்மை. நம் அன்னை தந்தை நமக்கு உரைத்ததை, நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு சொல்லி வருகிறோம், அவர்களும் அப்படியே நடந்து வருகின்றனர், கால்களை கழுவாவிட்டாலும், கைகளை கழுவிய பின்னரே, சாப்பிடுகின்றனர், இதுவும், இன்றைய விஞ்ஞானம் சொல்லியா, அவர்கள் அவ்வாறு செய்கின்றனர்?
இது போலவே, பல விசயங்களை, நாம் அனிச்சை செயலாக செய்து வருகிறோம், சிலவற்றை, நவீன காலத்தன்மைகளுக்கு ஏற்ப, உடல் வசதிக்காக மாற்றிக்கொள்கிறோம், அப்படி ஒரு மாற்றம்தான், டைனிங் டேபிளில் உணவு உண்பது. உடலுக்கு சிரமம் இல்லாத வகையில் விரைவாக உண்ண முடியும்ம பரிமாற்ற எளிதானது என்று சிலப்பல காரணங்கள் சொல்லிக் கொண்டு, நாம் செய்யும் இந்த செயலுக்கு நியாயம் கற்பிக்க முயல்கிறோம். இது எந்த அளவுக்கு உண்மை? இதனால், நம் உடல் நலத்துக்கு தீங்கு ஏதும் இல்லையா?
அதேபோல், உணவை ஒருவர் கிழக்கு நோக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும். இதனால் அவரது கல்வி, திறமை, கலைகள் யாவும் வளரும். மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் செல்வம் பெருகும். பீடை ஒழியும். தெற்கு நோக்கி அமர்ந்து உண்பதால் அழியாத புகழ் உண்டாகும், சொல்வன்மை பெருகும்.
ஆனால், வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் அந்த உணவே நோயை உருவாக்கும். எனவே, வடக்கு நோக்கி உண்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பெரியவர்கள் வலியுறுத்துகின்றனர். ஏன் என்றால், கிழக்கு திசை இந்திரனுக்கு சொந்தமானது. இதனால் அவரது கட்டளைக்குட்பட்ட புதனும், குருவும் அறிவைக் கொடுப்பார்கள். மேற்கு திசையின் அதிபதியான மகாலட்சுமி செல்வத்தை வாரி வழங்குவதில் ஆச்சர்யமில்லை. வடக்கு திசை ருத்திரனுக்கு உறைவிடம் எனவே, அது நோயை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. தெற்கு திசை எமனுக்கு உரியது. தர்மத்தின் தலைவனான எமன் நீங்காத புகழைத் தருபவன். அதைப்போலவே தனது வீட்டைத் தவிர உறவினர், நண்பர்கள் வீட்டில் உண்ணும்போது மேற்கு திசையை நோக்கி உண்ணக்கூடாது. அப்படி சாப்பிட்டால், அந்த உறவு கெட்டு விடும் என்றும் கூறப்படுகிறது.
உணவை எப்போதும் கைகளால்தான் உண்ண வேண்டும். நன்கு சுத்தம் செய்த கரத்தால் உண்பதே பல நோய்களை வரவிடாமல் தடுக்கும். கைகளால் உணவை அள்ளி உண்ணும்போது ஜீரண சக்தியை அதிகரிக்கும். உணவைக் கைகளால் உண்ணும்போது உடலின் நரம்புகள் நாம் உணவு உண்கிறோம் என்ற செய்தியை மூளைக்கு அனுப்புகிறது. இதனால், ஜீரணம் மிக எளிதாக நடைபெறுகிறது. ஐந்து விரல்களையும் குவித்து உண்பது ஒரு சூட்சும முத்திரை நிலை. இதனால் ஜீரண மண்டலம் துரிதமாகச் செயல்படுகிறது.
Readmore: பூசாரி பார்த்த மொரட்டு வேலை..!! வலையில் சிக்கிய தொழிலதிபர்..!! சூனியத்தால் சுக்குநூறான குடும்பம்..!!