ரயில் ஸ்டேஷனை கடக்கும்போது லோகோ பைலட் ஸ்டேஷன் மாஸ்டரிடம் வளையத்தை மாற்றிக்கொள்வது ஏன் தெரியுமா..? – பலருக்கு தெரியாத காரணம்..

train2

இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்குகளில் ஒன்று. ஆனால், அதில் இன்னும் சில பழைய மரபுகள் இன்று வரை கடைபிடிக்கப்படுகின்றன என்பதை பலர் அறியமாட்டார்கள். அவற்றில் முக்கியமானது ரயில் ஓட்டுநர் (லோகோ பைலட்) ஸ்டேஷனை கடக்கும்போது, ஸ்டேஷன் மாஸ்டர் கையிலிருந்து ஒரு “பிரம்பு வளையம்” வாங்கும் பழக்கம். இதற்கு பின்னால் அதிசயமான காரணம் ஒன்று இருக்கிறது.


ரயில் வேகமாக ஒரு ஸ்டேஷனை கடக்கும்போது, லோகோ பைலட் கையில் வைத்திருக்கும் பழைய வளையத்தை ப்ளாட்பாரத்தில் வீசிவிட்டு, அதே நேரத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் பிடித்திருக்கும் புதிய வளையத்தை லாவகமாகப் பிடித்து வாங்கிக் கொள்வார். இது ஒரு நொடியில் நடக்கும் துல்லியமான செயல். ஒருவேளை அந்த வளையத்தை தவற விட்டால், ரயிலை உடனே நிறுத்தி அதை வாங்கி ஆக வேண்டும் என்பதே ரயில்வே விதி.

அந்த வளையத்தில் சின்ன பிரம்பு பெட்டியுடன் ஒரு “இரும்புச் சாவி” இருக்கும். அதைக் கொண்டு ரயில் கடந்து சென்ற பிறகு, ரயில்வே கேட் லாக்கை திறக்க முடியும். இதுவே அந்த கேட் திறப்பதற்கான ஒரே பாதுகாப்பு முறை. அதாவது, ஒரு ரயில் ஒரு பகுதியை கடந்து விட்டது என்பதை உறுதிப்படுத்தும் “பாதுகாப்புச் சின்னம்” தான் அந்த வளையம். ரயிலின் பாதுகாப்பு, சாலைப் போக்குவரத்து கட்டுப்பாடு, மற்றும் சிக்னல் ஒழுங்குகள் அனைத்தும் இதன் மூலம் இணைக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு சாதாரண வளையம் போலத் தோன்றினாலும், அது ரயில்வேயின் பாதுகாப்புக் கொள்கையின் முக்கிய நுட்பம். தொழில்நுட்பம் எவ்வளவு வேகமாக வளர்ந்தாலும், இந்த பழமையான நடைமுறை இன்று வரை தொடர்வது இந்திய ரயில்வேயின் மரபு மற்றும் துல்லியத்தின் சின்னமாக உள்ளது.

Read more: நீங்களும் கோடீஸ்வரராகலாம்..! இந்த பொதுவான தவறுகளை தவிர்த்தால் போதும்..! ரூ.1 கோடி பணம் உங்கள் கையில்..!

English Summary

Do you know why the loco pilot changes this ring to the station master when passing a train station?

Next Post

FASTag பயனர்களுக்கு எச்சரிக்கை! இதை செய்யாவிட்டால் உங்கள் டேக் பிளாக் செய்யப்படும்.. முழு விவரம்..!

Thu Oct 30 , 2025
இந்தியாவில் FASTag பயன்படுத்துவோர் அனைவரும் புதிய Know Your Vehicle (KYV) விதிமுறையை நிறைவேற்ற வேண்டும்; இல்லையெனில் அவர்களின் டாக்கள் (FASTags) டோல் பிளாசாக்களில் தடைசெய்யப்படும் அபாயம் உள்ளது. அரசு இந்த விதியை கட்டாயமாக்கியுள்ளது, காரணம் FASTag மோசடிகளை தடுக்கவும், புதிய தானியங்கி டோலிங் அமைப்பை (Automated Tolling System) செயல்படுத்தவும். KYV எப்போது தொடங்கியது? KYV விதிமுறை 2024 அக்டோபர் 31 முதல் அமலுக்கு வந்தது. ஆரம்பத்தில் வங்கிகள் […]
fastag

You May Like