குலதெய்வ வழிபாடு ஏன் முக்கியம் தெரியுமா..? கடைசியா நீங்க எப்போ போனீங்க..?

God 2025 1

தெய்வங்களில் மிகவும் வலிமையானது குலதெய்வம். இது தலைமுறை தலைமுறையாக வழிபடும் தெய்வத்தைக் குறிக்கிறது. இந்த வழிபாடு, ஒருவரின் வாழ்நாளில் முக்கியமான கடமைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இன்றைய வாழ்க்கைச் சூழலில், குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம் மறைந்து கொண்டே போகிறது.


குலதெய்வம் என்பது ஒரு குடும்பத்தின் மூதாதையர்கள் வழியாகப் பரம்பரை வழியில் வழிபடும் தெய்வம் ஆகும். இது சில குடும்பங்களில் முருகன், அம்மன், விநாயகர் போன்ற தெய்வங்களாக இருக்கலாம். சிலருக்கோ கிராம தெய்வங்கள், மரபு வனத்தெய்வங்கள் அல்லது சிவன், விஷ்ணு போன்ற முக்கிய தெய்வங்களாக இருக்கலாம்.

ஒரு குடும்பம் தொடங்கியதும், அதன் பாதுகாப்புக்காக அந்த மூதாதையர்கள் ஒரு தெய்வத்தை தங்களுடைய “குலதெய்வமாக” ஏற்று வழிபட்டனர். அதே வழியைத் தொடர்ந்து, தலைமுறையெல்லாம் அதே தெய்வத்தையே வழிபடுவது வழக்கம். குலதெய்வ வழிபாடு செய்வதன் மூலம், நம் மூதாதையர்களின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கிறது. அதேசமயம், நம் குடும்பத்தின் சூழ்நிலைகள், நலன் மற்றும் பாதுகாப்பு ஆகியவையும் குலதெய்வத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.

நமக்குத் தெரியாமலேயே, குடும்பத்தில் ஏற்படும் சில பிரச்சனைகளான உடல்நல பாதிப்பு, திருமண தாமதம், குழந்தையின்மை, வேலை வாய்ப்பில் இடையூறு போன்றவை ஆன்மீகக் காரணங்களால் இருக்கலாம் என்று பலரும் நம்புகிறார்கள். அதில் முக்கியமான ஒன்றாக குலதெய்வ வழிபாட்டைத் தவிர்ப்பது என்று கூறப்படுகிறது. சில பெரியோர்கள் சொல்வது போல, “குலதெய்வம் கோபித்தால், குடும்பம் சோர்ந்துவிடும்” என்பது ஒரு எச்சரிக்கையாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது.

குலதெய்வ வழிபாடு என்பதுகுடும்ப ஒற்றுமையை நிரூபிக்கும் ஒரு உணர்வுப் பிணைப்பு. ஆண்டுக்கு ஒருமுறையாவது அந்தத் தெய்வத்திற்காக செலவிடுவது, நம் குடும்பத்தின் நலனையும் காத்து நம்மை மேலும் நன்மை பெறச்செய்யும். குலதெய்வ வழிபாடு என்பது மூதாதையர்களின் ஆசீர்வாதமும், குடும்பத்தின் நலனுக்கான ஆன்மீக வழியும். எனவே, எதை மறந்தாலும், குலதெய்வ வழிபாட்டை மட்டும் மறந்து விடக் கூடாது.

Read More : இட்லி முதல் தேங்காய் சட்னி, சாம்பார் வரை!. எனர்ஜி தரும் 8 காலை உணவுகள்!

CHELLA

Next Post

தமிழகம் முழுவதும் 20 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு...! தமிழக அரசு அரசாணை

Sun Aug 17 , 2025
பள்ளிக்கல்வித் துறையில் 20 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அரசாணையில்; நடப்பு கல்வியாண்டில் (2025-26) 20 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது அறிவிப்பு வெளியிட்டார். அதை செயல்படுத்தும் விதமாக தற்போது 20 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் […]
Teachers School 2025

You May Like