உங்கள் கனவில் அடிக்கடி பல்லி வருகிறதா.. அதிர்ஷ்டமா..? துரதிஷ்டமா..? தெரிஞ்சுக்கோங்க பாஸ்..

palli

இரவில் கனவு வருவது இயல்பான ஒன்று தான். இது தூக்கத்தின் தரத்தை பாதிக்கிறது மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். அந்த வகையில் ஒருவர் தன்னுடைய கனவில் பல்லியைப் பார்ப்பது சுகமாக கருதப்படுவதில்லை. அதனால் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். இந்த கனவு எப்படி பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என விரிவாக தெரிந்து கொள்வோம்.


ஒருவர் தன்னுடைய கனவில் ஒரு பல்லி பூச்சிகளை பிடித்து சாப்பிடுவது போன்று கண்டால், அவருக்கு நிதி சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் நிதி நெருக்கடிகள் ஏற்படும். ஒருவரின் கனவில் ஒரு பல்லியை கொள்வது போன்ற கனவு வந்தால், அந்த நபரின் வாழ்க்கையில் என்ன ஒரு பிரச்சனை நடந்தாலும் அது விரைவில் முடிவுக்கு வரும் என்று பொருள்.

ஒருவரின் கனவில் பல்லியை பார்த்து பயந்து ஓடுவது போன்ற கனவு சாதகமற்றதாகவும், அதே போல நீங்கள் அதை துரத்துவது போன்ற கனவு வருவது உங்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை சமாளித்து வெற்றி பெற வாய்ப்பு உண்டாக்கும். உங்கள் மனதில் துணிச்சலும், தைரியமாக அதிகரிக்கும். அதனால் உங்கள் கடினமான சூழலில் இருந்து விரைவில் வெளிவர முடியும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்க கூடிய சூழல் உருவாகும்.

ஒருவரின் கனவில் ஒரு பல்லி வீட்டில் நுழைவது போன்ற கண்டால், அந்த நபர் மிகவும் எச்சரிக்கையாக அடுத்த சில தினங்களில் இருப்பது அவசியம். ஏனெனில் அந்த நபரின் குடும்பத்தினருக்கு ஒரு பெரிய ஒரு பிரச்சனை வரப்போகிறது என அந்த கனவு உணர்த்துகிறது. அது மட்டும் இல்லாமல் நீங்கள் செய்யக்கூடிய வேலை., குடும்ப பொறுப்புகளை மிக கவனமாக செய்து முடிப்பது அவசியம்.

ஒருவரின் கனவில் பல பல்லிகளை ஒரே இடத்தில் பார்ப்பது போன்று வந்தால் அது அசுபமாக கருதப்படுகிறது. இது அவர்களின் வாழ்க்கையில் எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை தரக்கூடியதாக இருக்கும். குறிப்பாக பணியிடத்தில் வேலைப் பளுவால் மன அழுத்தம் உண்டாகும். ஆரோக்கிய குறைபாடு ஏற்படும். அதனால் நீங்கள் எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும் அது எச்சரிக்கையுடன் செயல்படவும்.

Read more: OMG..! ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்த தங்கம்.. சவரன் ரூ.9 ஆயிரத்தை கடந்தது..!!

Next Post

இயற்கை காளான் vs பண்ணை காளான்..!! எது சிறந்தது..? எதில் விஷத்தன்மை அதிகம் இருக்கும்..? சாப்பிடும்போது உஷார்..!!

Tue Jun 3 , 2025
சமீபகாலமாக பலரும் விரும்பி உண்ணப்படும் உணவாக, காளான் இருக்கிறது. அவை சூரிய ஒளியில் இருந்து ஆற்றலைப் பெற்று, அதை மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்) ஆக மாற்றி வளர்கின்றன. பொதுவாக காளான்கள் தாங்கள் வளர்வதற்கு தேவையான கார்போஹைட்ரேட்டுகளை மற்ற தாவரங்களில் இருந்து பெற்றுக் கொள்ளும். இதனால், காளான்களை பூஞ்சை குடும்பத் தாவரமாக அடையாளப்படுத்துகின்றனர். காளான்கள் 3 வகைகளாக பிரிக்கப்படுகிறது. இதில், முதல் வகை, ‘சப்ரோபைட்டுகள்’ எனப்படும் பூஞ்சை காளான்கள் ஆகும். இவை இலைகள், […]
Mushroom 2025

You May Like