தினசரி தலைக்கு குளிப்பதன் மூலம் வியர்வை, அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெயை நீக்கி முடியை சுத்தமாக வைத்திருக்க முடியும். இது பொடுகு, அரிப்பு மற்றும் பிற தலை முடி பிரச்சினைகளைத் தடுக்க உதவும்.
தினசரி தலைக்கு குளிப்பது மன அழுத்தம், சோர்வைக் குறைத்து புத்துணர்ச்சியான அனுபவத்தைக் கொடுக்கும். தலை குளித்த பிறகு அதிலிருந்து வரும் வாசனை நம் மனநிலையை மேம்படுத்தி சுய நம்பிக்கையை அதிகரிக்க உதவும்.
தினசரி தலைக்கு குளிப்பதால் உங்கள் முடியை எளிதாக ஸ்டைல் செய்யலாம். ஈரமான முடியில் ஸ்டைல் செய்வது வறண்ட முடியில் ஸ்டைல் செய்வதை விட எளிதானது. மற்றும் இவ்வாறு செய்வது அந்த ஸ்டைல் கலையாமல் நீண்ட காலம் நீடித்திருக்க உதவும். இதே போன்று குளித்த பின்பும் பலருக்கும் தூக்கம் வரும். ஆனால் குளித்த உடனே தூங்கினால் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை கட்டாயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
குளித்த உடனே தூங்கினால் அதிகப்படியான தலைவலியை ஏற்படுத்துவதுடன், தலைக்கு குளிக்கும் போது இந்த பிரச்சனை இன்னும் மோசமான விளைவை ஏற்படுத்தும். ஏனெனில் தலைமுடி ஈரமாக இருக்கும் போது உடல் வெப்பநிலை குறைவதுடன், ரத்த ஓட்டமும் பாதிக்கப்பட்டு மூளையில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் தலைவலி ஏற்படுகின்றது.
ஈரமான தலையுடன் தூங்கும் போது சளி இருமல் மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும். குறிப்பாக குளிர்ந்த நீரில் தலைக்கு குளிப்பது உடல்நல பிரச்சனைகளின் அபாயத்தை மேலும் அதிகரிக்கும். இதே போன்று ஈரமான தலைமுடியுடன் தூங்கினால் முடி வேர்கள் பலவீனமடைவதுடன், எளிதில் உடைந்தும் விடுகின்றது. இதனால் முடியில் இருக்கும் இயற்கையான பளபளப்பு இழக்கப்படுவதுடன், குறித்த ஈரப்பதத்தினால் உச்சந்தலையில் பாக்டீரியாக்களும் வளருமாம்.
குளித்த உடனே தூங்கினால் உடல் வெப்பநிலையில் குறைந்து, தசைகள் மற்றும் மூட்டுவலியை ஏற்படுத்தும். இறுதியில் நாள்பட்ட பலியாகவும் மாறுகின்றது. குளித்த உடனே தூங்குவதால், செரிமான செயல்முறை மெதுவாவதுடன், வயிற்று பிரச்சனையும், அஜீரண பிரச்சனையையும் ஏற்படுத்தும். ஈரமான தலைமுடியுடன் தலையணையில் தூங்கினால், தலையணையில் பாக்டீரிய வளர்ச்சி அதிகரித்து, முகப்பரு, சரும ஒவ்வாமை மற்றும் பிற தோல் பிரச்சனை ஏற்படும்.
Readmore: உட்கார்ந்திருக்கும் போது கால் ஆட்டும் பழக்கம் உள்ளவரா நீங்கள்?. உடனே நிறுத்துங்க!