மெட்டா AI கண்ணாடிகளை யூஸ் பண்றீங்களா..? உடலுறவு, ஆடை அவிழ்ப்பது, மலம் கழிப்பது.. அனைத்தையும் பார்க்கும் ஊழியர்கள்..!

meta glasses blog resized desktop 1

கென்யாவின் நைரோபி நகரத்தில் இருக்கும் தொழில்நுட்ப ஊழியர்கள், உங்கள் மெட்டா AI ஸ்மார்ட் கண்ணாடி மூலம் செய்திருக்கக்கூடிய வீடியோக்களை பரிசோதித்து வருகின்றனர். இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளில் உள்ள கேமரா மற்றும் மைக்ரோஃபோன் மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ கிளிப்புகளை அவர்கள் பார்த்து, அவற்றுக்கு விளக்கக் குறிப்புகள் சேர்த்து வருகின்றனர். இது புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மாடல்களை பயிற்றுவிப்பதற்கான தரவு தயாரிப்பு செயல்முறையில் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு கட்டமாகும்.


கென்யாவில் பணிபுரியும் சில ஊழியர்கள் கூறுவதாவது, இந்த வீடியோக்களில் சிலவற்றில் மிகவும் தனிப்பட்ட காட்சிகள் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்வீடனின் செய்தித்தாள்களின் வெளியான அறிக்கையின்படி, சில வீடியோக்களில் மக்கள் கழிப்பறைக்கு செல்லும் காட்சிகள், உடைகளை கழற்றும் தருணங்கள் அல்லது உடலுறவு கொண்டிருக்கும் காட்சிகள் போன்றவை இருக்கலாம் என்று தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த வீடியோ காட்சிகள் சமா(Sama) என்ற தொழில்நுட்ப ஒப்பந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் அனுப்பப்படுகின்றன. இவர்கள் “டேட்டா அனோட்டேட்டர்கள்” (data annotators) என அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் வீடியோக்களை பார்வையிட்டு, அதில் என்ன நடக்கிறது என்பதை குறிச்சொற்களாக (labels) சேர்ப்பது தான் அவர்களின் வேலை.

“நாங்கள் எல்லாவற்றையும் பார்க்கிறோம்.. வீட்டு அறைகள் முதல் நிர்வாண உடல்கள் வரை. சில காட்சிகளில் ஸ்மார்ட் கண்ணாடி அணிந்த ஒருவர் உடலுறவில் ஈடுபட்டபடியே அதை பதிவு செய்திருக்கிறார்,” என்று ஒரு தொழிலாளர் கூறியதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சில வீடியோக்களில் ஒருவர் கழிப்பறைக்கு செல்லும் காட்சியும், சிலரில் ஒருவர் உடையை கழற்றும் காட்சியும் தெரிகிறது. அவர்கள் பதிவு செய்கிறார்கள் என்பதை அவர்களுக்கு தெரியாது என்று நான் நினைக்கிறேன். தெரிந்திருந்தால் அவர்கள் இப்படி பதிவு செய்ய மாட்டார்கள்,” என்றும் அந்த தொழிலாளர் கூறியுள்ளார்.

சில வீடியோக்களில் மக்களின் வங்கி கார்டு விவரங்களும் தவறுதலாக பதிவாகியிருப்பதாகவும் தொழிலாளர்கள் கூறியுள்ளனர். இத்தகைய வீடியோக்கள் வெளியே கசிந்தால் “மிகப்பெரிய சர்ச்சைகள்” உருவாகும் அபாயம் இருப்பதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் ஒரு ஊழியர் கூறியதாவது, இந்த வீடியோக்களை பார்வையிட்டு குறிச்சொற்கள் சேர்க்கும் பணியை செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும், இல்லையெனில் வேலை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

“நீங்கள் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பார்க்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்கிறீர்கள். ஆனால் அதே நேரத்தில் இந்த வேலையை நீங்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைப் பற்றி கேள்வி கேட்கக் கூடாது. நீங்கள் கேள்வி கேட்கத் தொடங்கினால், வேலை இழக்க நேரிடும்,” என்று அந்த ஊழியர் கூறியுள்ளார்.

மெட்டா நிறுவனத்தின் விதிமுறைகள்

மெட்டா நிறுவனம் தனது ஸ்மார்ட் கண்ணாடிகள் தனியுரிமையை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டதாகவும், பயனர்கள் தங்களது தரவுகளை கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறுகிறது. ஆனால் இந்த தயாரிப்பின் தனியுரிமைக் கொள்கையில் தரவு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது பொதுவான மற்றும் தெளிவற்ற முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“சில சந்தர்ப்பங்களில், AI-களுடன் நீங்கள் மேற்கொள்ளும் தொடர்புகளை — அதாவது உங்கள் உரையாடல்கள் அல்லது AI-க்கு அனுப்பும் செய்திகள், மெட்டா ஆய்வு செய்யலாம். இந்த ஆய்வு தானியங்கி முறையிலோ அல்லது மனிதர்களின் உதவியோடு நடைபெறலாம்,” என்று Meta நிறுவனத்தின் தனியுரிமைக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “AI பயன்படுத்தி சேமிக்க வேண்டாம் என்று நீங்கள் நினைக்கும் தகவல்களை — குறிப்பாக நுணுக்கமான அல்லது தனிப்பட்ட தகவல்களை — பகிர வேண்டாம்,” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மெட்டா ஸ்மார்ட் கண்ணாடிகளை அணிந்தவர்கள் “Hey Meta” என்று கூறி AI சாட்பாட்டுடன் பேச முடியும். அந்த AI மூலம் கேமராவை இயக்கி, முதல் நபர் பார்வையில் (first-person view) வீடியோ அழைப்புகள் செய்யவோ அல்லது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்யவோ முடியும்.

இந்த AI கண்ணாடிகள் EssilorLuxottica என்ற கண் கண்ணாடி தயாரிப்பு நிறுவனமான இணைந்து தயாரிக்கப்பட்டவை. மெட்டா நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் இந்த AI கண்ணாடிகளில் சுமார் 70 லட்சம் (7 million) யூனிட்களை விற்றுள்ளது. அதற்கு முன்பு 2023 மற்றும் 2024 ஆகிய இரண்டு ஆண்டுகளில் சேர்த்து சுமார் 20 லட்சம் ஸ்மார்ட் கண்ணாடிகள் விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பாவிற்கு மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது.. ஈரான் அறிவிப்பு..!

RUPA

Next Post

வீட்டில் அடிக்கடி சண்டை வருதா..? வாஸ்து படி இந்த ஒரு விஷயத்தை செய்தால் போதும்..!

Thu Mar 5 , 2026
பெரிய காரணமே இல்லாமல் வீட்டில் அடிக்கடி சண்டைகள் நடப்பது வழக்கம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் சரியாகப் பேசாமல் இருப்பது, குடும்ப உறுப்பினர்கள் சிறிய விஷயங்களுக்கு வாக்குவாதம் செய்வது போன்ற சூழ்நிலைகள் பல வீடுகளில் காணப்படுகின்றன. இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், வீட்டின் வாஸ்து குறைபாடுகள் குடும்பத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வீட்டில் எப்போதும் பதற்றம் இருந்தால், அது பெரியவர்களை மட்டுமல்ல, […]
husband wife fight 1

You May Like