பண கஷ்டம் நீங்க வேண்டுமா?. வியாழக்கிழமை விரதம் இருந்து வழிபடுங்கள்!. மறந்துகூட இதையெல்லாம் செய்யாதீர்கள்!

thursday gurubhagavan 11zon

வியாழக்கிழமை என்பது மிகப் பெரிய கோளாக கருதப்படும் வியாழன் கோளுக்குரியதாகும். வியாழன் எனப்படும் குரு பகவான் ஜோதிட சாஸ்திரத்தில் மங்கலகாரகன், ஞானகாரகன் என போற்றப்படுபவர். கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ வளம் ஆகியவற்றிற்கு காரணமானவர் குரு பகவான் தான். வியாழக்கிழமை, குரு பகவானின் அருளை பெறுவதற்கு ஏற்ற நாளாகும். இந்த நாளில் குரு பகவானுக்கு பிடிக்காத விஷயங்களை செய்யாமல் தவிர்ப்பது பலவிதமான நன்மைகளை ஏற்படுத்தும். அப்படி வியாழக்கிழமையில் தவறுதலாக கூட செய்யக் கூடாத 5 விஷியங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.


வியாழக்கிழமை என்பது குரு பகவானுக்குரிய நாளாகும். அதனால் இதை வடமொழியில் குருவார் என்று குறிப்பிடுகிறார்கள். அது மட்டுமல்ல இது மகாவிஷ்ணுவிற்கும் ஏற்ற நாளாகும். வியாழக்கிழமையானது மங்கலங்களையும், பாசிடிவ் ஆற்றல்களையும் அதிகமாக ஈர்க்கக் கூடிய நாளாகும். அதனால் இந்த நாளில் சில குறிப்பிட்ட விஷயங்களை செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது. அந்த குறிப்பிட்ட விஷயங்களை வியாழக்கிழமையில் செய்வதால் ஒருவரின் மனநலம், பொருளாதார நிலைமை ஆகியவை பாதிக்கப்படுவதுடன் தீமைகளை அதிகம் சந்திக்க வேண்டி இருக்கும். அதே சமயம் குரு பகவான் மற்றும் மகாவிஷ்ணுவிற்கு பிரியமான விஷயங்களை இந்த நாளில் செய்தால் வளர்ச்சி, அதிர்ஷ்டம், நல்ல எதிர்காலம், செல்வ வளம் ஆகியவற்றை பெற முடியும்.

வாரத்தில் வரும் ஏழு நாட்களில் வியாழக்கிழமை பிரகஸ்பதி எனப்படும் குரு பகவான் வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கிறது. வியாழக்கிழமை விரதத்தை சரியான படி அனுஷ்டிப்பவர்களுக்கு குரு பகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். சிலர் என்ன செய்தாலும் கஷ்டமாகவே இருக்கும். பண வருமானம் குறைந்து பொருளாதார நெருக்கடி ஏற்படும். பண பிரச்சினை நீங்க வியாழக்கிழமை விரதத்தை மேற்கொள்ளலாம். வியாழக்கிழமை செய்யும் பரிகாரத்திற்கு நல்ல பலன் கிடைக்கும்.

குருபகவானின் அருளும் குரு பகவானின் பார்வையும் இருந்தால் நல்ல வேலை கிடைக்கும். திருமண வாழ்க்கை அமையும், குழந்தை பாக்கியம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிப்பர்கள், கடன் பிரச்சினையில் சிக்கி மீள முடியாமல் தவிப்பவர்கள் குரு பகவான் அருளை வேண்டி விரதம் இருக்கலாம்.

வியாழக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பதையோ அல்லது வாங்குவதையோ தவிர்க்க வேண்டும். இதனால் பொருளாதார நிலையற்ற தன்மை என்பத ஏற்படும். வியாழக்கிழமைக்குரிய குரு பகவான் செல்வ வளம், சொத்துக்கள் ஆகியவற்றிற்கும் காரணமானவர். அதனால் இந்த நாளில் கடன் விஷயங்களை தவிர்க்க வேண்டும். மாறாக தான தர்மங்கள் செய்யலாம். இதனால் நேர்மறை ஆற்றல்கள் ஈர்க்கப்பட்டு, பொருளாதார நிலைத்தன்மையும், செல்வ சேர்க்கையும் ஏற்படும். அதே போல் வியாழக்கிழமைகளில் பணம் தொடர்பான ஒப்பந்தங்கள் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

வியாழக்கிழமையில் தலைக்கு குளிப்பது, குறிப்பாக எண்ணெய் தேய்த்து குளிப்பது அபசகுனமாக கருதப்படுகிறது. இதனால் உங்களின் அதிர்ஷ்டம் செல்வம் ஆகியவை கழுவப்பட்டு விடும். குரு பகவான் வளர்ச்சி, பெருக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடைய கிரகம். அதனால் வியாழக்கிழமையில் தலைக்கு குளிப்பதை தவிர்த்து, குளித்து விட்டு சுத்தமாக இருந்து, இறை வழிபாட்டில் ஈடுபடலாம். நேர்மறையான விஷயங்களை கொண்டு வரும் செயல்களில் ஈடுபடலாம்.

வியாழக்கிழமையில் குளிப்பதற்கு சோப் பயன்படுத்தும் போது உங்களின் ஆராவில் இருக்கும் இயற்கையான ஆற்றல்கள் நீங்கி விடும். குரு பகவான் இயற்கையான விஷயங்கள், ஞானம் ஆகியவற்றை வழங்கக் கூடியவர். இதனால் சோப் பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கையான முறைகளை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். உதாரணத்திற்கு மூலிகை பொடிகள் போன்றவற்றை பயன்படுத்தலாம். இந்த எளிமையான வழி குரு பகவானின் ஆற்றலை ஈர்க்கும் தன்மையுடன், பாசிடிவான எனர்ஜிகளையும் ஈர்க்க செய்யும்.

வியாழக்கிழமையில் நகம் அல்லது முடி வெட்டுவதை தவிர்க்க வேண்டும். இது உங்களின் உடலில் உள்ள இயற்கையான எனர்ஜியை பாதிக்கும். இதனால் வியாழக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் நகம் வெட்டுவது, முடி வெட்டுவது ஆகியவற்றை செய்யலாம். வியாழக்கிழமை, நம்முடைய உடலில், ஆராவில் இருக்கும் இயற்கையான ஆற்றல்கள் ஆகியவற்றை பலப்படுத்துவதற்கான நாளாகும். இந்த நாளில் குரு பகவானுக்கு விருப்பமான காரியங்களை செய்வது நன்மைகளை அதிகரிக்க செய்யும்.

Readmore: “பணம் தான் வெச்சிருக்கியே.. கூப்டா வர மாட்டியா”..? உடலுறவுக்கு மறுத்த இளைஞர்..!! ஓங்கி பளார்விட்ட திருநங்கை..!! சுருண்டு விழுந்து பலி..!!

KOKILA

Next Post

தங்க நகைக்கடன் வழங்க கடுமையான கட்டுப்பாடு..‌! முதல்வர் ஸ்டாலின் கடிதம்...!

Thu May 29 , 2025
தங்க நகைக்கடன் வழங்குவதற்கான நெறிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்யக்கோரி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில்; விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்களுக்கு தங்க நகைகளை ஈடாக ஏற்றுக்கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வரைவு வழிகாட்டு […]
mk Stalin 2025 4

You May Like