100 வயதுக்கு மேலும் வாழ ஆசையா..? இதை மட்டும் நீங்கள் சரியாக செய்தால் மரணத்தில் இருந்து தப்பிக்கலாம்..!!

Healthy 2025

மனித உடல் என்பது, சுற்றுச்சூழலுடன் ஒன்றிணைந்து இயங்குகிறது. நாம் உண்ணும் உணவிலிருந்து, குடிக்கும் நீரிலிருந்து, சுவாசிக்கும் காற்றில் இருந்து, சூரிய வெளிச்சத்திலிருந்து, என அன்றாட சூழ்நிலையின் அனைத்து அம்சங்களும் நம் உடலை நேரடியாகத் தாக்குகின்றன.


இவ்வாறு, இயற்கையோடு நெருங்கிய ஒத்துழைப்பிலேயே மனித வாழ்க்கை தாங்கி நிற்கிறது. ஆகவே, நாம் உண்பது சுத்தமான உணவாக இருக்க வேண்டும். நாம் குடிப்பது நல்ல நீராக இருக்க வேண்டும். நாம் சுவாசிப்பது தூய காற்றாக இருக்க வேண்டும்.

ஆனால் நாம் எவ்வளவு விழிப்புடன் இருந்தாலும், எப்போது வேண்டுமானாலும், தவறான உணவுகள், நீர் மற்றும் காற்று நமக்குள் நுழைய வாய்ப்பு இருக்கிறது. சில நேரங்களில் தெரியாமலே, நாம் சுவாசிக்கும் காற்று மாசு நிறைந்ததாக இருக்கலாம். குடிக்கும் நீர் முழுமையாக சுத்தமில்லாமல் இருக்கலாம். மேலும் கூடுதலாக பாக்கெட் உணவுகள், ரசாயனங்கள் கலந்த பருப்புகள், பழங்கள் ஆகியவை நம் உணவுத் தட்டில் தவறாமல் இடம்பெறுகின்றன.

இவை அனைத்திலும் இருக்கும் நச்சுப் பொருட்கள் (toxins) நம் உடலுக்குள் மெதுவாகச் சென்று படிந்து கொள்ள ஆரம்பிக்கின்றன. நாம் உணராத வகையில், இந்த நச்சுகள் உடலுக்குள் தேங்கி, பின்னர் பலவிதமான பிரச்சனைகளை தருகின்றன.

உடலின் முக்கியமான இயற்கை சக்தி பிராணசக்தி. நம்முள் நுழையும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற இது முயற்சி செய்கிறது. இந்த இயற்கையான செயல்தான் சில நேரங்களில் நோயாகவே வெளிப்படுகிறது. உண்மையில், நோய் என்பது ஒரு எதிர்வினை மட்டுமே. உடலை சுத்திகரிக்கும் ஒரு வழி.

உள்ளிழுக்கும் இயக்கம், வெளித் தள்ளும் இயக்கம் ஆகிய இரண்டும் சரியாக இயங்கும் போது, உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. நாம் நல்ல உணவுகளை எடுத்துக்கொள்கிறோம் என்றாலும், அதன் முழு பகுதிகளையும் உடல் ஏற்றுக்கொள்ளாது. தேவையான பகுதியை மட்டும் retains செய்து, மீதியைக் கழிவாக மாற்றிவிடுகிறது. குடிக்கும் நீரிலும் இதேதான் நடைமுறை தான். காற்றும் விதிவிலக்கல்ல.

இந்த கழிவுகள் வியர்வை, மூச்சு, சிறுநீர் மற்றும் மலம் ஆகிய வழிகளில் வெளியேற்றப்படுகின்றன. இந்த செயல்முறைகளில் சீர்கேடு ஏற்பட்டால்தான் நோய்கள் உருவாகின்றன. அந்த செயல்முறைகள் முற்றிலும் முடக்கப்பட்டால், அதுவே மரணத்திற்கு காரணமாகிறது. நோய்கள் தவிர்க்க முடியாதவை என்று நாம் நினைத்தாலும், உண்மையில் நோய் என்பது உடலின் சுத்திகரிப்பு முயற்சி என்பதை உணர வேண்டும். அந்த முயற்சிக்கு நம்மால் முடிந்த அளவுக்கு துணை நிற்கும் வாழ்க்கை முறையையே நாம் தேர்வு செய்ய வேண்டும்.

Read More : நாய் கடித்தால் மட்டுமல்ல..!! இந்த விலங்குகள் கடித்தாலும் உங்கள் உயிருக்கே ஆபத்து..!! ரேபிஸ் பரவுவது எப்படி..?

CHELLA

Next Post

குழந்தையை ரயிலுக்கு வெளியே இறக்கி விட்ட மர்ம நபர்.. பிளாட்பாரத்தில் கதறிய பிஞ்சு உயிர்.. பரபரத்த பரங்கிமலை..!!

Sun Aug 17 , 2025
A shocking incident has occurred where a child was left at a train station.
rail

You May Like