’நரபலி கொடுக்கப்பட்ட பெண்களை பச்சையாக சாப்பிட்ட டாக்டர் குடும்பம்’..!! அதிரவைக்கும் வாக்குமூலம்..!!

கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


கேரள மாநிலத்தில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த வழக்கில் பகவால் சிங் மற்றும் அவரது மனைவி லைலா மற்றும் அகமது முகமது ஷபி 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

’நரபலி கொடுக்கப்பட்ட பெண்களை பச்சையாக சாப்பிட்ட டாக்டர் குடும்பம்’..!! அதிரவைக்கும் வாக்குமூலம்..!!
பகவால் சிங் – மனைவி லைலா

பகவால் சிங்கின் மனைவி லைலாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ’கொலை செய்யப்பட்ட 2 பெண்களின் உடல்களை, பச்சையாக சாப்பிட முகமது ஷபி வலியுறுத்தியதாகவும், அந்த உடலை சமைத்து சாப்பிடலாம் என கூறியதற்கு ஒரு மந்திரப் புத்தகத்தை எடுத்து வைத்து அந்த மந்திர புத்தகத்தில் பச்சையாக சாப்பிட கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, 3 பேரும் உடல்களை பச்சையாக சாப்பிட்டோம்’ என்று லைலா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். மேலும் நரபலி கொடுத்த பின் பத்மா, ரோஸ்லின் ஆகிய 2 பேரின் உடல்களில் இருந்த நகைகளை எர்ணாகுளம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் அடகு வைத்து அந்த பணத்தையும் செலவு செய்துள்ளதாக லைலா வாக்குமூலம் அளித்துள்ளார்.

பகவால் சிங் மற்றும் அவரது மனைவி லைலா

தற்போது இந்த வாக்குமூலம் ஒட்டுமொத்த கேரளாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தற்போது 3 பேர் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், மேலும் 10 நாட்கள் தங்கள் கஸ்டடிக்குள் வைத்து விசாரணை நடத்த வேண்டும் என காவல்துறையினர் நீதிமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றனர்.

CHELLA

Next Post

இனி பயனர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க வாட்ஸ் அப் நிறுவனம் முடிவு..!! புதிய வசதி அறிமுகம்..!!

Wed Oct 12 , 2022
வாட்ஸ்அப் செயலியில் 32 பேருடன் ஒரே நேரத்தில் வீடியோ காலில் பேசுவது உள்ளிட்ட பல வசதிகளை உள்ளடக்கிய பிரீமியம் சந்தா அதன் பீட்டா வெர்ஷனில் அறிமுகமாகியுள்ளது. மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் மூலம் பெருமளவு வருமானத்தை ஈட்டி வரும் நிலையில், அந்நிறுவனத்தின் மற்றொரு சமூக ஊடக தளமான வாட்ஸ்அப் தளம் விளம்பரங்கள் இல்லாமலும், சந்தா திட்டங்கள் இல்லாமலும் இதுநாள் வரை பயனர்களுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டு […]
#BREAKING: மீண்டும் செயல்பட தொடங்கியது வாட்ஸ் அப்..!! நிம்மதி பெருமூச்சு விட்ட பயனர்கள்..!!

You May Like