புனேவின் ஜெஹாங்கிர் மருத்துவமனை மருத்துவர்கள், 68 வயது பெண்ணின் கருப்பையில் இருந்த 18 கிலோ கட்டியை அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றினர்.
பீகாரைச் சேர்ந்த மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்ட 68 வயதான பெண் ஒருவர், நாள்பட்ட வயிற்று வீக்கம் மற்றும் அசௌகரியத்தை அனுபவித்து வந்துள்ளார். இதையடுத்து, மருத்துவமனையில் சோதனை செய்த நிலையில், ஒரு பெரிய கருப்பை கட்டி இருப்பது தெரியவந்தது. சாதாரண கட்டி என்றாலும், அதன் வளர்ச்சியின் தன்மை கடுமையான கவலைகளை எழுப்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், மேல் சிகிச்சை பெற புனேவில் உள்ள ஜெஹாங்கிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூத்த மகப்பேறு மருத்துவர் நினா மன்சுகானி மற்றும் மூத்த ஆன்கோசர்ஜன் மற்றும் ஆன்கோ சயின்சஸ் இயக்குநர் டாக்டர் சி பி கோப்பிகர் தலைமையிலான மருத்துவர் குழு, சிகிச்சையை மேற்கொண்டனர். அப்போது, அறுவை சிகிச்சையில் 44 x 37 x 30 செ.மீ அளவுள்ள ஒரு பெரிய கட்டியும், இதில் கிட்டத்தட்ட 16 லிட்டர் திரவம் மற்றும் தோராயமாக 18 கிலோ எடை கொண்டது என்பது தெரியவந்தது.
கருப்பை மியூசினஸ் சிஸ்டாடெனோமா என்ற குறைந்த வீரியம் மிக்க திறன் கொண்ட அந்த அரிய கட்டியை அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக நீக்கினர். இதையடுத்து அப்பெண், 10 நாட்கள் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது எடை 116 கிலோவிலிருந்து 96 கிலோவாகக் குறைந்தது.
Readmore: வீடு கட்டுவதற்கு மத்திய அரசு வழங்கும் மானியம் பெறுவது எப்படி…? அவசியம் தெரிஞ்சுக்கோங்க