தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறப்பவர் நடிகர் அஜித்குமார். இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் ஏகே என்றும் அழைக்கின்றனர். அஜித் குமார், சினிமா மட்டுமின்றி, கார் பந்தயங்களிலும் பங்கு பெற்று வெற்றி பெற்று வருகிறார். இவர், ஜெர்மனி, மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் நடைபெற்றுள்ள கார் பந்தயங்களில் பங்கேற்றுள்ளார்.
அமர்க்களம் என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை சாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோசுகா என்ற பெண் குழந்தையும், ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் இருக்கின்றனர். ஆரம்பத்தில் இவர், விளம்பரப் படங்களில் நடித்தார். தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முன் 1992இல் பிரேம புத்தகம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். பின்னரே அமராவதி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில் தான், அஜித் குறித்து பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, தயாரிப்பாளருக்காக நடிகர் அஜித் சம்பளமே வாங்காமல் ஒரு படத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறாராம். மேலும், தயாரிப்பாளர் கொடுத்த செக்கையும் இதுவரை வங்கியில் மாற்றாமல் அப்படியே வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, கடந்த 1998ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காதல் மன்னன். இப்படத்தில் அஜித் ஹீரோவாக நடித்திருப்பார். இந்தப் படத்தின் மூலம் தான், சரண் இயக்குநராக அறிமுகமானார்.
இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து, மானு, விவேக், எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய நடிகர்கள் நடித்தனர். இப்படமும் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. ஆனால், இப்படத்தை பார்க்க வந்த விநியோகஸ்தர்கள் யாரும் படத்தை வாங்க முன்வரவில்லை. மேலும், குறைந்த விலையில் படத்தை வாங்கிக் கொள்வதாக கூறியிருக்கின்றனர். ஆனால், இப்படம் வெளியாகி ஹிட் அடித்தது. விநியோகஸ்தர்களுக்கு லாபம் கொட்டியது.
ஆனால், தயாரிப்பாளர்களுக்குக் கைகொடுக்கவில்லை. இதனால் நடிகர் அஜித், அடுத்த படமும் உங்களுக்காக நடிக்கிறேன் என்று தயாரிப்பாளர்களிடம் உறுதியளித்துள்ளார். இந்நிலையில், இது தொடர்பாக இயக்குநர் சரண் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், “அஜித் தான் கொடுத்த வாக்குறுதிபடி, 2-வது படம் அந்தத் தயாரிப்பாளர்களுக்கு நடித்துக் கொடுத்தார். அந்தப் படம் தான் ‘அமர்க்களம்’. இந்தப் படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. ‘காதல் மன்னன்’ படத்தால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டதால், ‘அமர்க்களம்’ படத்திற்கு கொடுத்த அட்வான்ஸ் செக்கை கூட இன்று வரை மாற்றாமல், அப்படியே வங்கியில் வைத்திருக்கிறாராம். மேலும், சொன்னபடி, ‘அமர்க்களம்’ படத்திற்காக அவர் கடைசி வரை சம்பளமே வாங்கவில்லை” என்று சரண் கூறியுள்ளார்.
Read More : துணி துவைத்தபோது திடீரென வெடித்த வாஷிங் மெஷின்..!! வீடு முழுவதும் பற்றி எரிந்த தீ..!! நடந்தது என்ன..?