வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை வீட்டில் மாவு அரைத்து மக்கள் சேமித்து வைக்கிறார்கள். இந்த மாவை முறையாக சேமித்து வைக்கவில்லை என்றால், விரைவில் மாவு புளித்துவிடும். ஆகையால், தோசை மாவ புளித்துவிடாமல், நீண்ட நாட்களுக்கு இருக்க என்ன செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நம் பாரம்பரிய உணவுகளில் இட்லியும் ஒன்று. இட்லி, தோசை போன்ற உணவுகள் நம் வீட்டில் பொதுவாக தயாரிக்கப்படும் உணவுகள் ஆகும். சிலருக்கு இட்லி பிடிக்கும் என்றாலும், பெரும்பாலானவர்களுக்கு இட்லி என்றாலே அலர்ஜி தான். தோசை எத்தனை வேண்டுமானாலும் சாப்பிடுபவர்கள், இட்லி என்றாலே ஓடிவிடுகின்றனர். ஆனால், சிலரது வீடுகளில் காலை அல்லது இரவு உணவாக இட்லி இடம்பெற்றிருக்கிறது.
இதற்காக, வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை வீட்டில் மாவு அரைத்து மக்கள் சேமித்து வைக்கிறார்கள். இந்த மாவை முறையாக சேமித்து வைக்கவில்லை என்றால், விரைவில் மாவு புளித்துவிடும். ஆகையால், தோசை மாவ புளித்துவிடாமல், நீண்ட நாட்களுக்கு இருக்க என்ன செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இட்லிக்கு அரைத்த மாவில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து வைத்தால் இட்லி பூப்போல இருக்கும். தோசை மாவு புளிக்காமல் இருக்க மாவுடன் வெண்டைக்காய் காம்புகளை போட்டு வைத்தால் போதும்.
மாவை ஃபிரிட்ஜில் வைப்பது சிறந்தது. இதனால் வெப்பநிலை குறைந்து பாக்டீரியா வளர்ச்சி குறையும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக மாவு நீண்ட நாட்கள் புளிக்காமல் இருக்கும். அதேபோல், நீங்கள் வைக்கும் மாவு பாத்திரம் சுத்தமாக இருப்பது அவசியம். இதற்கு மாறாக அசுத்தமாக இருந்தால், விரைவில் பாக்டீரியாக்கள் வளர்ந்து, மாவு புளித்துவிடும்.
பழைய மாவுடன் புதிய மாவை கலக்க வேண்டாம். இதனால் மாவு விரைவில் புளிந்துப்போகும் வாய்ப்பு உள்ளது. அதேபோல், மாவை அடிக்கடி கிளறினால் அதில் உள்ள காற்று அதிகரித்து பாக்டீரியா வளர்ச்சி உண்டாகும். ஆகையால் இதை தவிர்ப்பது நல்லது. தோசை, இட்லி மாவை அரைத்த பின் அதை அப்படியே கலக்காமல் வைக்க வேண்டும். இவ்வாறு, மாவு புளிக்காமல் இருக்க பல வழிகள் உள்ளன. இந்த எளிய முறைகளை பின்பற்றி தோசை மாவை புளிக்காமல் வைத்து நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தலாம்.