நமது உடல் வெப்பம் அல்லது உஷ்ணமாக இருந்தால், அதை உடல் சூடு என்று சொல்வார்கள். பொதுவாக, மனித உடலின் இயல்பான வெப்பநிலை என்பது 37°C (98.6°F) ஆகும். இந்த வெப்பநிலை அதிகமாகும் போது, “உடல் சூடு” என்கிறோம். உடல் சூடு ஏற்பட பல காரணங்கள் சொல்லப்படுகிறது. தீவிரமான உடற்பயிற்சி, அதிக உடல் உழைப்பு, வெப்பமான வானிலை அல்லது வெப்பமான சூழலில் இருப்பது, உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாதது ஆகியவை காரணமாக இருக்கிறது.
அதேபோல் காரமான, புளிப்பான, உப்பு அதிகம் உள்ள உணவுகள், அதிக இறைச்சி, டீ, காஃபி அதிகம் குடிப்பது, காய்ச்சல், தைராய்டு பிரச்சனைகள் போன்ற சில நோய்கள் அல்லது சில மருந்துகள் உடல் சூட்டை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் காரணமாகவும் உடல் சூடு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதே சமயம் சிலர் கோழிக்கறி சாப்பிட்டால் தனக்கு சூடு என்று சொல்வார்கள். ஆனால், இதுகுறித்து யூடியூப் சேனலில் விளக்கம் அளித்துள்ள டாக்டர் அருணாச்சலம், “செத்த கோழியில் சூடு என்பதே கிடையாது. கோழிக்கறி சாப்பிட்டால் உடலில் சூடு அதிகமாகிவிடும் என்று சொல்கிறார்கள். தமிழ்நாட்டில், ஒவ்வொருவருக்கும் பரிட்சையமான விஷயம் என்ன என்றால் அசைவ உணவுகள் சூடு என்று சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் அசைவ உணவுகளில் ஒன்றுமே கிடையாது.
வெளிநாடுகளில், சூப் மாதிரி வைத்து சாப்பிடுவார்கள். ஆனால், அவர்களுக்கு எந்த பிரச்சனையுமே வராது. கறி மட்டும் அல்லாமல் அதில் கொஞ்சம் காய்கறிகளையும் சேர்த்து சாப்பிடுவார்கள். இதனால், அவர்களுக்கு உடல் சூடு பிரச்சனை இருக்காது. அதேபோல், வெளிநாடுகளில் காய்கறிகள் வைத்து சாலட் செய்வதால், இந்த பிரச்சனை இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.
Read More : அப்படிப்போடு..!! கடும் எதிர்ப்புகளுக்கு பணிந்தது ஆர்பிஐ..!! நகைக்கடன் நிபந்தனைகளை தளர்த்துவதாக அறிவிப்பு..!!