வீட்டில் எல்லோரும் ஒரே சோப்பு போட்டு குளிக்கிறீங்களா..? அதிர்ச்சி தரும் உண்மை..!! இனி தொடவே தொடாதீங்க..!!

Soap 2025

பெரும்பாலான வீடுகளில் காணப்படும் ஒரு வழக்கமான பழக்கம்தான், அனைவரும் ஒரே குளியல் சோப்பை பயன்படுத்துவது. குடும்ப உறுப்பினர்கள் என்பதற்காக ஒரே சோப்பை பகிர்ந்து கொள்வதில் பாதிப்பு இருக்காது என நினைப்பது வழக்கம். ஆனால், இது சில நேரங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக மாறும்.


ஒவ்வொருவருக்கும் சரும அமைப்பு வித்தியாசமானது. ஒருவருக்கு ஏற்கனவே உள்ள சருமம் தொடர்பான தொற்றுகள், மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, பலர் ஒரே சோப்பைப் பயன்படுத்தும்போது, அந்த சோப்பை பயன்படுத்திய பின் நன்றாக கழுவாமல், ஈரமாகவே வைத்துவிடுவது வைத்து விடுவார்கள். அப்போது சோப்பில் கிருமிகள் பரவுவதற்கும், பெருகுவதற்கும் வாய்ப்பு உண்டு.

சிலர் தோலில் புண், அலர்ஜி, எக்ஸிமா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் பயன்படுத்திய சோப்பை மற்றவர்கள் நேரடியாக பயன்படுத்தும்போது, அந்த நுண்ணுயிரிகள் உங்களுக்கும் பரவ வாய்ப்பு அதிகம். இதில் பாக்டீரியா, வைரஸ், பங்கஸ் போன்ற தொற்றுகள் அடங்கும். ஆரோக்கியமான தோல் அமைப்பை கொண்டவர்கள் அதிக பாதிப்பின்றி இருக்கக்கூடிய சாத்தியம் இருந்தாலும், குறைந்த எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இதனால் பாதிக்கப்படலாம்.

அதனால், ஒரே சோப்பை பலர் பகிர்ந்து பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில், அந்த சோப்பை நன்றாக கழுவி உலர வைத்த பின் பயன்படுத்துவது பாதுகாப்பானது. அதேபோல், இதற்கு மாற்றுவழி என்பது திரவ சோப்புகள் (liquid soaps) தான். பாட்டில்களில் வரும் இந்த வகையான சோப்புகள், நேரடி தொடர்பின்றி பயன்படுத்தப்படுவதால், தொற்று பரவும் அபாயம் குறையும்.

குளியல் என்பது வெறும் சுத்தமாக இருப்பதற்கான ஒரு செயலாக மட்டுமல்ல. அது ஒரு ஆரோக்கிய பழக்கமாகவும் இருக்க வேண்டும். குளிக்கும்போது, சில நிமிடங்களை ஒதுக்கி, தரமான சோப்புகளை பயன்படுத்தி, சுத்தமாக குளித்தால், நமது தோல் ஆரோக்கியமாக இருக்கும். குடும்ப உறவுகள் என்றாலும் கூட, தனிப்பட்ட சுத்தம் என்பது அவசியம். பாதுகாப்பான குளியல் பழக்கங்கள், ஆரோக்கிய வாழ்வுக்கான அடிப்படை என்று உணர வேண்டும்.

Read More : ஜூஸ் குடித்ததும் மயங்கிய 15 வயது சிறுமி..!! விடுதியில் விடிய விடிய நடந்த பயங்கரம்..!! நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்..!!

CHELLA

Next Post

கெட்ட கனவாக மாறிய சாகச ரைடு.. 30 அடி உயரத்தில் தொங்கிய பெண்.. துணிச்சலுடன் காப்பாற்றிய நபர்.. வைரல் வீடியோ..

Tue Aug 12 , 2025
சத்தீஸ்கரில் உள்ள ஒரு பூங்காவில் வேடிக்கை நிறைந்த, சாகச ரைடு, ஒரு பெண்ணுக்கு ஒரு கெட்ட கனவாக மாறியது. ஒரு ஜெயண்ட் வீலில் சவாரி செய்யும் போது, அப்பெண் சமநிலையை இழந்து பகுதியளவு திறந்திருந்த கேபினிலிருந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, அவரால் அந்த பிரமாண்டமான கட்டமைப்பைப் பிடித்துக் கொள்ள முடிந்தது. ஜெயண்ட் வீலின் ஊழியர் என்று அடையாளம் காணப்பட்ட ஒரு துணிச்சலான மனிதர் அப்பெண்ணை பத்திரமாக மீட்டுள்ளார்.. சத்தீஸ்கரின் பலோடபஜாரின் […]
Giant Wheel viral video

You May Like