சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது சருமத்தை பாதுகாக்கும் முக்கியமான வழிமுறையாக பரிந்துரைக்கப்பட்டு வருகிற நிலையில், சில சமூக வலைதளங்களில் “சன் ஸ்கிரீன் போட்டால் புற்றுநோய் வரலாம்” என்கிற வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்தக் குழப்பத்திற்கு முடிவுகொடுத்துள்ளார் சரும நிபுணர் டாக்டர் ஸ்வேதா ராகுல். தற்போதைய சூரிய கதிர்வீச்சு மற்றும் கேஜட் மூலம் வரும் வெளிச்சங்களை மையமாகக் கொண்டு, சருமம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க சன் ஸ்கிரீன் மிகவும் அவசியம் என டாக்டர் கூறுகிறார்.
சன் ஸ்கிரீன் தயாரிப்பு ஆரம்ப காலங்களில் சில பாதிப்பு ஏற்படுத்தும் UV ஃபில்டர்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், இப்போது சந்தையில் உள்ள தயாரிப்புகள் அனைத்தும் பாதுகாப்பானவையாக இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன. புற்றுநோய் அல்லது ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதாக அறிவியல் ஆதாரம் எதுவும் இல்லை என்றும் டாக்டர் ஸ்வேதா ராகுல் கூறுகிறார்.
சன் ஸ்கிரீன் ஏன் அவசியம்? புற ஊதாக் கதிர்கள் (UV rays) சருமத்தை நச்சுப்போல பாதிக்கும். அதிகமான கதிர்வீச்சுகள் கருமை, உரிசல், சரும சுருக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். உங்கள் சருமம் மிக வேகமாக பாதிக்காமல் இருக்கணும்னா கட்டாயம் அப்ளை பண்ணுங்க.
பாதுகாப்பான பயன்படுத்தும் வழிமுறைகள்: முகம் மற்றும் கழுத்தில் மட்டும் இல்லாமல், வெளிவரக்கூடிய பிற பகுதிகளிலும் அப்ளை செய்யலாம். சருமத்துக்கேற்ற SPF அளவுள்ள சன் ஸ்கிரீனை தேர்வு செய்ய சரும நிபுணரின் ஆலோசனை பெறலாம். சன் ஸ்கிரீனை ஒரு நாளில் பலமுறை reapplied செய்வது சிறந்தது.
சன் ஸ்கிரீன் தொடர்பான சமூக வலைதள வதந்திகளில் உண்மை எதுவும் இல்லை.
சருமப் பாதுகாப்பிற்காக சன் ஸ்கிரீன் ஒரு முக்கிய பாதுகாப்பு கவசம் என்பதை மருத்துவ உலகம் உறுதியாகக் கூறுகிறது. அதனால், சன் ஸ்கிரீன் போட்டால் கேன்சர் வரும் என்பதைக் கண்டிப்பாக நம்ப வேண்டாம் என்று டாக்டர் ஸ்வேதா ராகுல் எச்சரிக்கிறார்.
Read more: ஒரு மணி நேரம் போதும்.. மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கலாம்..!! டாப் 5 பகுதி நேர வேலைகள் இதோ..