தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் ’ஊரில் இருக்கும் நாயி , பேயி ’ சொல்றதுக்கெல்லாம் பதில் அளிக்க முடியாது என கடுப்பாக பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகின்றது.
கடலூர் மாவட்டத்தில் பா.ஜ.க தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பா.ஜ. தலைவர் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார். பின்னர் அவரிடம் செய்தியாளர்களிடம் கேள்வி கேட்க மைக்கை நீட்டியபோது அவர் கடுப்பானார். என்ன மரத்து மேல குரங்கு தாவுர மாதிரி சுத்தி சுத்தி வர்ரீங்க.. என்ன இது, நான் உங்ககிட்ட என்ன சொன்னேன்… சாப்பிட போகும்போது என்ன சொன்னேன். மரியாதையா நின்னு நீங்க சாப்புடுங்கனு சொன்னேனா.. ஊர்ல நாயி பேயி, சாராயம் விக்குறவன் சொல்றத கேப்பீங்க உங்களுக்கு நான் பதில் சொல்னுமா ? என காட்டமாக பேசியுள்ளார்.