வியாழக்கிழமைகளில் வாழைப்பழத்தை தானம் கொடுத்தால் செல்வம் பெருகும்!. சூரியன் உதிக்குமுன் விஷ்ணு பகவானை வழிபடுங்கள்!

vishnu thursday 11zon

வியாழக் கிழமைகளில், சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து குளித்து முடித்துவிட்டு, விஷ்ணு பகவானுக்கு விளக்கேற்றி, பூஜை செய்து வணங்க வேண்டும். விஷ்ணு பகவானை வணங்கிய பின் மஞ்சள் நிற பொருட்களை மற்றவர்களுக்கு தானம் வழங்க வேண்டும். வியாழக் கிழமைகளில் குருவை வணங்கி விரதம் இருந்து, சிவபெருமானுக்கு மஞ்சள் லட்டு செய்து, படைத்து வணங்க வேண்டும்.


சிவபெருமானை தரிசித்து முடிந்ததும், வாழை மரத்திற்கு மஞ்சள் நிறமுள்ள இனிப்பு பலகாரங்களை வைத்து படைத்து வணங்கி, மஞ்சள் நிற உடைகளை மற்றவர்களுக்கு தானமாக வழங்க வேண்டும். இதனால் உங்களின் உடல் ஆரோக்கியம் எப்போதும் சிறப்பாக இருக்கும். வியாழக்கிழமை அன்று செய்யும் இந்த பூஜையில் வாழைப்பழத்தை தானம் வணங்கி வந்தால், அது ஒருவரது வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்கும்.

வியாழக் கிழமைகளில் விஷ்ணு கடவுளுக்கு பூஜை வழிபாடுகள் செய்யும் போது, மஞ்சள் நிற சாமந்திப் பூ மாலையை விஷ்ணு பகவானுக்கு வைத்து படைத்தால், விஷ்ணு பகவான் ஆனந்தமாகி, வீட்டில் செல்வம் வளத்தை அதிகரிக்கச் செய்வார். வியாழக்கிழமைகளில் சிவபெருமான் மற்றும் குருவிற்கான பூஜைகளை செய்வதால், அன்று முழுவதும் ‘ஓம் நமோ நாராயணாய’ என்னும் மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இதனால் வீட்டில் செல்வம், அதிர்ஷ்டம், சந்தோஷம் போன்றவை அதிகரித்து எப்போதும் நிலைத்து இருக்கும்.

Readmore: இந்திரனுக்கும் பெண்கள் மாதவிடாய்க்கும் இப்படியொரு தொடர்பா?. சாபத்தால் வந்த வினை!. விஷ்ணு கொடுத்த வரம்!

KOKILA

Next Post

அச்சுறுத்தும் இயற்கை பேரிடர்கள்!. மீள்வது எப்படி?. இன்று உலக சுற்றுச்சூழல் தினம்!

Thu Jun 5 , 2025
நாம் வாழும் பூமி, நமக்கான ஒரே ஒரு பூமி அதன் அழிவை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கையில் நாம் அதை சுரண்டி பிழைப்பதற்காக வேகமாக ஓடி கொண்டிருக்கிறோம். மேல் சொன்ன காற்று, சூரிய ஒளி எல்லாம் நீங்கள் அதை கவனித்து எத்தனை நாட்கள் ஆகின்றது என்பதற்கான கேள்வி மட்டுமே. இப்போது நீங்கள் இவற்றை கவனித்தால் இது எதிலும் தூய்மையை காண முடியாது. சுற்றமான காற்றும், தூசு படராத ஒளியும் […]
World Environment Day 11zon

You May Like