’யாரும் நம்பாதீங்க’..!! மது அருந்த அனுமதியில்லை..!! அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பு விளக்கம்

திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதியில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் இனி சிறப்பு அனுமதி பெற்று மது பரிமாறலாம். ஒரு நாள் நிகழ்ச்சிக்கு கூட அனுமதி பெற்று மதுபானங்களை பயன்படுத்தலாம். மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற்று மதுவிலக்கு துணை ஆணையர்கள் சிறப்பு அனுமதியை வழங்கலாம். சிறப்பு அனுமதிக்கான கட்டணங்களை நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை பார்கள், நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமே மதுபானம் வழங்க அனுமதி இருந்தது. F.L.12 என்ற லைசன்ஸுக்கான கட்டணம் அரசிதழில் இடம்பெற்றுள்ளது.


இதற்கு பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக பாமக வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் திருமண அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்கள் மற்றும் வீடுகளில் மதுவை இருப்பு வைக்கவும், விருந்தினர்களுக்கு பரிமாறவும் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருக்கிறது. அரசின் இந்த முடிவு மிக மோசமான சமூக, பண்பாட்டு சீரழிவுக்கு வழிவகுக்கும். தமிழ்நாட்டின் மதுக் கொள்கையின்படி குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகளை அனுமதிக்கக் கூடாது. பள்ளிகள் மற்றும் கோயில்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் மதுக்கடைகள் இருக்க கூடாது. ஆனால், தமிழக அரசு அளித்துள்ள புதிய அனுமதிகளின் அடிப்படையில் இந்த விதிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்படும்.

தமிழ்நாட்டை ஒரு சொட்டு மதுகூட இல்லாத மாநிலமாக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம். எனவே திருமண அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்கள் மற்றும் வீடுகளில் மது பரிமாற அனுமதிக்கும் அரசாணையை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மிகக் கடுமையான பல கட்ட போராட்டங்களை எனது தலைமையில் பாமக முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அன்புமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். அதில், திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதியில்லை. சர்வதேச நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே மதுபானங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சர்வதேச நிகழ்ச்சிகளில் மதுபானம் அனுமதி நடைமுறையில் உள்ளது என தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

CHELLA

Next Post

’Farewell கொடுக்க வந்திருக்காங்க’..!! ஓய்வு குறித்து சூசகமாக அறிவித்த தோனி..!! சோகத்தில் ரசிகர்கள்..!!

Mon Apr 24 , 2023
கொல்கத்தா ரசிகர்கள் எனக்கு பிரியாவிடை கொடுக்க தான் சென்னை அணி ஜெர்ஸியில் வந்துள்ளனர் என தனது ஓய்வு குறித்து தோனி மீண்டும் பேசியிருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை நேற்று அதன் சொந்த மைதானத்தில் எதிர்கொண்டது சென்னை அணி. இதில் டாஸ் வென்ற கொல்கத்த அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை அணியின் கான்வே, ராகனே, துபே உள்ளிட்ட 3 வீரர்கள் […]
’Farewell கொடுக்க வந்திருக்காங்க’..!! ஓய்வு குறித்து சூசகமாக அறிவித்த தோனி..!! சோகத்தில் ரசிகர்கள்..!!

You May Like