’ஆன்லைன் ஷாப்பிங்கில் கட்டாயம் இதை செய்யாதீங்க’..!! இல்லையென்றால் பணம் மாயமாகும்..!!

பண்டிகை காலம் நெருங்கி வரும் சமயத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்குவது வழக்கம். வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பதற்காக ஆன்லைன் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அள்ளிக் கொடுக்கும். இதனால், ஷாப்பிங் செய்பவர்கள் கண்மூடித்தனமாக இதில் இறங்கி விடக்கூடாது. இதிலும் ஏராளமான ஆபத்துக்கள் உள்ளது. நிறைய பேர் தங்களுடைய பணத்தை இழந்துள்ளார்கள். ஏனெனில், இன்றைய காலக்கட்டத்தில் பலவிதமான வழிகளில் மோசடிகள் அரங்கேறி வருகிறது.

’ஆன்லைன் ஷாப்பிங்கில் கட்டாயம் இதை செய்யாதீங்க’..!! இல்லையென்றால் பணம் மாயமாகும்..!!

நீங்கள் எவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் நொடிப்பொழுதில் உங்களுடைய வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடி விடுவார்கள். எனவே, ஷாப்பிங் செய்வதற்கு முன்னர் இந்த விஷயங்களை எல்லாம் மறந்து விட வேண்டாம். ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் இணையதளத்தில் விளம்பரங்கள் அதிகமாக இருக்கும். தேவையற்ற வெப்சைட்டுகளும் இடை இடையில் விளம்பரம் லிங்க் செய்யப்பட்டிருக்கும். இதில் தவறுதலாக எதையும் கிளிக் செய்தால் பணம் திருடப்பட வாய்ப்புள்ளது. எனவே கவனமுடன் இருக்க வேண்டும்.

’ஆன்லைன் ஷாப்பிங்கில் கட்டாயம் இதை செய்யாதீங்க’..!! இல்லையென்றால் பணம் மாயமாகும்..!!

ஆன்லைன் ஷாப்பிங் செய்த பிறகு கடைசியாக QR code மூலம் பணம் செலுத்துவதற்கு பணம் அனுப்பும் முறை இருக்கும். இதில் கவனமுடன் இருக்க வேண்டும். சரியான ஐடியில் சென்று பணம் செலுத்த வேண்டும். ஏனெனில், இதிலும் ஏமாற்றுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. பிறகு அனைத்து பணத்தையும் ஒரே வங்கிக் கணக்கில் வைத்திருப்பவர்களுக்கு அதில், நிறைய பணம் இருக்கும். ஷாப்பிங் செய்யும் போது அந்த வங்கிக் கணக்கு பயன்படுத்தினால் அதிலுள்ள பணம் திருட வாய்ப்புள்ளது. எனவே, ஷாப்பிங் சமயத்தில் தனியாக ஒரு வங்கி கணக்கை பயன்படுத்தினால் நல்லது.

CHELLA

Next Post

’நான் ஹாஸ்டல் போக மாட்டேன்’..!! ஆத்திரத்தில் தாயின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொன்ற சிறுவன்..!!

Thu Oct 13 , 2022
தூங்கிக் கொண்டிருந்த தாயின் தலையில் மகன் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஒருவன், சரியாக படிக்காததால் விடுதியில் சேர்க்க அவனது பெற்றோர் திட்டமிட்டுள்ளனர். இதை தெரிந்து கொண்ட அந்த மாணவன், தான் விடுதிக்கு செல்ல விருப்பமில்லை என்று தாய் யுவராணியிடம் கூறியிருக்கிறான். ஆனால், தாய் யுவராணியோ நீ விடுதியில் தங்கியிருந்தால்தான் சரியாக […]
தாயுடன் மாயமான குழந்தைகள்..!! கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள்..!! வழக்கில் திடீர் திருப்பம்

You May Like