உங்கள் வீட்டு குப்பைத் தொட்டியை இந்த திசையில் மட்டும் வைக்காதீங்க..!! வாஸ்துப்படி எங்கு வைத்தால் நல்லது நடக்கும்..?

Trash Bin 2025

நாம் குடியிருக்கும் வீடு நேர்மறை ஆற்றலுடன் நிறைந்திருந்தால் தான், அந்த வீட்டில் சந்தோஷமும், செல்வமும் நிறைந்திருக்கும். உங்க்ள் வீட்டில் நேர்மறை ஆற்றலை நிறைந்திருக்க வேண்டுமென்றால், குடியிருக்கும் வீடு வாஸ்துப்படி இருக்க வேண்டும். அதோடு, வீட்டில் வைத்திருக்கும் பொருட்களும் வாஸ்துப்படி சரியான திசையில் இருக்க வேண்டும்.


அந்த வகையில், வீட்டில் இருக்கும் குப்பைத் தொட்டியை சரியான இடத்தில் வைக்காவிட்டால், குடும்பத்தில் உள்ளவர்கள் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதுவும், குப்பை தொட்டியை தவறான திசையில் வைத்தால், லட்சுமி தேவி கோபப்பட்டு, பண பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.

குப்பைத் தொட்டியை எந்த திசையில் வைக்கக் கூடாது..?

* வாஸ்துப்படி, குப்பைத் தொட்டியை வீட்டிற்குள் வடகிழக்கு திசையில் வைக்கக்கூடாது. இப்படி வைப்பதால், வீட்டில் உள்ளோரின் மன ஆரோக்கியம் பாதிக்கப்படும். வீட்டில் இருப்பவர் எப்போதும் மன அழுத்தத்துடனேயே இருப்பார்.

* அதேபோல், குப்பைத் தொட்டியை வீட்டின் தென்கிழக்கு திசையில் வைத்தால், வீட்டில் பணம் தங்வே தங்காது. எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், அந்த பணம் வீட்டில் நிலைத்திருக்காது. தேவையில்லாத செலவுகளால் பணம் வீட்டில் தங்காது. முக்கியமாக கடன் சுமை அதிகரிக்கும். அதேபோல், குப்பைத் தொட்டியை வீட்டின் கிழக்கு திசையிலோ அல்லது வடக்கு திசையிலோ வைக்கக்கூடாது.

குப்பைத் தொட்டியை எந்த திசையில் வைக்க வேண்டும்..?

* வீட்டில் இருக்கும் குப்பைத் தொட்டியை வாஸ்துப்படி, எப்போதும் வீட்டின் தென்மேற்கு அல்லது வடமேற்கு திசையில் தான் வைக்க வேண்டும். அதிலும், தென்மேற்கு திசை மிகவும் நல்லது.

* குப்பைத் தொட்டியை வடகிழக்கு திசையில் வைத்தால், அந்த வீட்டில் வறுமை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை வடகிழக்கு திசையில் குப்பைத் தொட்டி வைத்தால், வீட்டில் இருப்பவர்கள் மனரீதியான பிரச்சனைகளை அதிகம் சந்திப்பார்கள்.

* அதேபோல், குப்பைத் தொட்டியை வடமேற்கு திசையில் வைப்பதால் எந்த எதிர்மறையான விளைவும் ஏற்படாது.

* அதேபோல், வாஸ்து சாஸ்திரத்தின் படி, குப்பைத் தொட்டி எப்போதும் வீட்டிற்கு வெளியே வைக்கக் கூடாது. வீட்டிற்குள் தான் இருக்க வேண்டும்.

Read More : அப்படிப்போடு..!! கடும் எதிர்ப்புகளுக்கு பணிந்தது ஆர்பிஐ..!! நகைக்கடன் நிபந்தனைகளை தளர்த்துவதாக அறிவிப்பு..!!

CHELLA

Next Post

பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் 108 சிவ தலங்கள்..!! எந்த பிரச்சனை தீர எந்த கோயிலுக்கு செல்ல வேண்டும் தெரியுமா..?

Sun Jun 8 , 2025
மனித வாழ்க்கை என்பது பிரச்சனைகளால் சூழப்பட்ட ஒரு பெரும் சோதனைதான். முன் ஜென்ம பாவம், இந்த ஜென்மத்தில் செய்த பாவங்கள், பித்ரு தோஷம், கிரக தோஷம், குடும்ப சாபம் என ஏராளமான காரணங்களால் நம்மில் பலர் வாழ்க்கையில் தடைகளை எதிர்கொள்கிறோம். இவை தீர, பகவான் சிவன் அருளை நாடுவது தான் எளிய தீர்வாகக் கருதப்படுகிறது. சிவன் பாவங்களையும், தோஷங்களையும் நீக்கும் பரமோன்னதமான தெய்வம். அதனால் உலகெங்கும் உள்ள பக்தர்கள், தங்கள் […]
shiva temple 1

You May Like