“என் பொண்டாட்டியை விட்ருடா”..!! கெஞ்சிய கணவன்..!! விடாத கள்ளக்காதலன்..!! கடைசியில் நடந்த பயங்கரம்..!!

Sex 2025

சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்த ராஜதுரை (30), ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த பிளம்பர் அன்பு கணபதி (28) என்பவருக்கும், ராஜதுரையின் மனைவி மதுவுக்கும் இடையே கடந்த 6 மாதங்களாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. ராஜதுரை இதனை அறிந்ததும், கணபதியை கண்டித்துள்ளார். ஆனால், கணபதி கள்ளக்காதலை கைவிடவில்லை. இந்நிலையில், இரு குடும்பத்தினரும் இந்த விவகாரம் குறித்துப் பேசி சமாதானம் செய்ய முயற்சித்துள்ளனர்.


இனிமேல் ராஜதுரையின் மனைவியுடன் பேச மாட்டேன் என அன்பு கணபதி உறுதியளித்ததால் அனைவரும் கலைந்து சென்றுள்ளனர். ஆனால், அன்று மாலை ராஜதுரைக்கும் அவரது மனைவி மதுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கோபத்தில் வீட்டைவிட்டு வெளியே சென்ற மது, ஒரு மணி நேரம் கழித்து திரும்பி வந்துள்ளார். இதனால், அன்பு கணபதி மீது ராஜதுரைக்கு சந்தேகம் அதிகரித்துள்ளது.

அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அன்பு கணபதிதான் காரணம் என எண்ணிய ராஜதுரை, அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அவர் அன்பு கணபதியை அழைத்து, நடந்ததை மறந்துவிடலாம் எனக் கூறி மது அருந்த அழைத்துள்ளார். இதையடுத்து, பெருங்குடி ரயில் நிலையம் அருகே இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியபோது, போதையில் அன்பு கணபதி தனது கள்ளக்காதல் குறித்து ராஜதுரையிடம் பெருமையாக பேசியுள்ளார்.

மேலும், அன்பு கணபதியின் பேச்சை கேட்டு ஆத்திரமடைந்த ராஜதுரை, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். ரத்த காயங்களுடன் தனது வீட்டை நோக்கி ஓடிய அன்பு கணபதியை, அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே, ராஜதுரை துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தால் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More : மாஸ் திட்டத்தை அறிமுகம் செய்யும் CM ஸ்டாலின்..!! போக்குவரத்துத் துறை வரலாற்றிலேயே முதல்முறை..!! மக்கள் செம ஹேப்பி..!!

CHELLA

Next Post

உஷார்..!! 8 பெண்களை காதல் வலையில் சிக்க வைத்த உல்லாசம்..!! திருமண தகவல் மையம் மூலம் நடந்த அரங்கேறிய அதிர்ச்சி மையம்..!!

Sun Sep 21 , 2025
சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (39), ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி. இவருக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் நடந்துள்ளன. இருந்தபோதிலும், திருமண தகவல் மையங்கள் மூலம் மற்ற பெண்களையும் ஏமாற்றத் தொடங்கியுள்ளார். தேனாம்பேட்டையைச் சேர்ந்த, கணவனை இழந்த ஒரு இளம்பெண், இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். திருமண தகவல் மையம் மூலம் இவருக்கு சுரேஷ்குமார் அறிமுகமாகியுள்ளார். அப்போது, சுரேஷ்குமார் தான் இன்னும் திருமணம் ஆகாதவர் என்றும், அந்தப் பெண்ணின் குழந்தைகளைத் தனது […]
Sex 2025 5

You May Like