”மழலையர் பள்ளிகளை திறக்காதீங்க”..!! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..!!

தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு இடங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. அதன்படி, நேற்று 12 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டி பதிவாகியுள்ளது. கரூர் மாவட்டம் பரமத்தியில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தாண்டில் தமிழ்நாட்டில் இதுதான் அதிகபட்ச வெப்பநிலை. சேலம் 106, ஈரோடு 105, வேலூர், திருச்சியில் தலா 104, திருத்தணி, திருப்பத்தூர், மதுரை நகரில் தலா 103, பாளையங்கோட்டை, தஞ்சையில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.


இதனை சமாளிக்க முடியாமல், முதியோர், குழந்தைகள், கர்ப்பிணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், குழந்தைகளின் நலன் கருதி கோடைக்காலம் முடியும் வரை மழலையர் பள்ளிகளை திறக்க வேண்டாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் அடுத்தடுத்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CHELLA

Next Post

’ஏதோ நடக்கப் போகிறது’..!! வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்..!! 3 இளம்பெண்கள் கொன்று புதைப்பு..!!

Wed Apr 19 , 2023
ஈகுவடார் நாட்டில் நயேலி டாபியா, யூலியானா மசியாஸ், டெனிஸ் ரெய்னா என்ற 3 இளம்பெண்கள் கடந்த 4ஆம் தேதி தனது நண்பர்களை பார்க்கச் செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றுள்ளனர். அதன் பின் அவர்கள் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பதறிப்போன பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பெண்கள் காணாமல்போனது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், […]
WhatsApp Image 2023 04 19 at 4.44.51 PM

You May Like