”எதுக்கும் கவலைப்படாதீங்க’..!! வடமாநில தொழிலாளர்களுக்கு தைரியம் சொன்ன முதலமைச்சர்.!!

தோள்சீலை போராட்டம் 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் நேற்று நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் முக.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து இன்று நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர் முதலமைச்சர் முக.ஸ்டாலின் திமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் நிறுவப்பட்ட கருணாநிதியின் 14.5 அடி உயர திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்.

WhatsApp Image 2023 03 07 at 1.38.19 PM1

இதனையடுத்து நாகர்கோவில் அருகே காவல்கிணறு பகுதியில் அமைந்துள்ள கானம் லேட்டக்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றும் பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்க மாநில தொழிலாளர்களை சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடினார். அந்த தொழிற்சாலையில் சுமார் 147 வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். வட மாநில தொழிலாளர்களிடம் தொழிற்சாலையில் ஏதேனும் குறைகள் உள்ளதா என்பதை கேட்டறிந்தார். அதன் பிறகு தமிழகத்தில் நிலவி வரும் சூழல் குறித்த கேட்ட முதல்வர் தைரியமாக இருங்கள், வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்தார். தொழிற்சாலைகளில் அவர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள், பாதுகாப்பு மற்றும் உரிய சம்பளம் வழங்கப்படுகின்றனவா? என கேட்டறிந்தார்.

CHELLA

Next Post

ரூ.500 நோட்டு குறித்து தீயாய் பரவும் செய்தி..!! உண்மை என்ன..? ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்

Tue Mar 7 , 2023
ரூ.500 நோட்டுகளை ரொக்கமாக வைத்துள்ள நபராக நீங்கள்..? உங்களுக்கு ஒரு பெரிய செய்தி வெளியாகியிருக்கிறது. இதுகுறித்த தகவலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. சந்தையில் 2 வகை 500 ரூபாய் நோட்டுகளானது கிடைக்கும் நிலையில், இரண்டுக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடில்லை. அதாவது முதல் பார்வையில் இதன் வேறுபாடுகளை அடையாளம் காண்பது என்பது கடினம். இதில் ஒருவகை நோட்டுகள் போலியானது என கூறப்படுகிறது. இது தொடர்பாக இணையத்தில் வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. […]
purse money

You May Like