நாட்டில் ஆதார் கார்டு என்பது முக்கிய ஆவணமாக உள்ளது. சிம் கார்டு வாங்குவது முதல் வங்கிக் கணக்கு தொடங்குவது வரை என அனைத்திற்குமே ஆதார் கார்டு அவசியம் தேவைப்படுகிறது. மேலும், இந்த ஆதார் கார்டை வைத்து கடனும் உங்களால் வாங்கிக் கொள்ள முடியும். அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
அதாவது, ஆதார் கார்டை வைத்து உங்களால் ரூ.10,000 வரை கடன் பெற முடியும். அதுவும், ஒரு சில நாட்களில், நெருக்கடியான நிதி தேவை ஏற்பட்டால் ஆதார் மூலம் கடனைப் பெற்றுக் கொள்ளலாம். வங்கிகள் மற்றும் NBFC நிறுவனங்கள் ஆதார் அடிப்படையிலான கடன்களை வழங்கி வருகின்றன. இந்த கடன் பாதுகாப்பற்றது என்பதால், எந்தவிதமான சொத்து உத்தரவாதம் கேட்கப்படாது.
இதன் மூலம் மாத சம்பளம் மற்றும் சுயதொழில் செய்வோருக்கு ஏற்ற விரைவான நிதி ஆதாரமாக செயல்படுகிறது. மேலும், e-KYC மூலம் சில நாட்களுக்குள் பணம் முழுவதுமாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
தகுதி மற்றும் தேவையான ஆவணங்கள் :
இந்த கடனை பெற வேண்டும் என்றால், நீங்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 21 வயது முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். மாதம் ரூ.25,000 சம்பளம் வாங்க வேண்டும். உங்கள் கிரெடிட் ஸ்கோர் 750 அல்லது நிரந்தர முகவரி
ஆதார் அட்டை பான், வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். கட்டாயமாக ஆதார் அட்டை/பான் கார்டு / வாக்காளர் ஐடி/ ஓட்டுநர் உரிமம், வங்கிக் கணக்கு விவரம், புகைப்படம் ஆகியவை தேவை.
இந்த கடன் தொகை பெற ஆன்லைன் மூலமே எளிதாக விண்ணப்பிக்கலாம். ஆதார் மூலம் கடன் வழங்கும் நிறுவனத்தின் இணையதளத்திற்குச் செல்ல வேண்டும் அல்லது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். தனிநபர் கடன் விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். பின்னர், ஆதார் எண் மற்றும் தகவல்களை பதிவிட வேண்டும். அடுத்து கொடுக்கப்படும் ஓடிபி மூலம் e-KYC ஐ நிறைவு செய்ய வேண்டும்.
அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பிறகு 2 அல்லது 3 நாட்களில் பணம் உங்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். உங்கள் ஆதார் – பான் கார்டு இணைக்கப்பட்டிருந்தால், கூடுதல் ஆவணங்கள் தேவைப்படாது. ஏற்கனவே ஏதேனும் கடன் மோசடி புகார்கள் இருந்தால், இக்கடன் பெற நீங்கள் தகுதியற்றவர்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி நெருக்கடியான நேரங்களில் வட்டி இல்லாத உரிமையுடனும் பணத்தை பெறலாம்.