தமிழ்நாட்டில் ஒருவழியாக கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்புகின்றனர். கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி இறுதி ஆண்டு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை தொடங்கியது. கிட்டத்தட்ட 45 நாட்களாக மாணவர்கள் இந்த கோடை விடுமுறையை கொண்டாடி வந்தனர். மேலும் இதனால் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களில் அதிகளவில் கூட்டம் கூடியது.
இந்த சூழலில் தான், கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் தமிழ்நாட்டில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால், சில மாணவர்கள் கொஞ்சம் சோகத்தில் உள்ளனர். ஆனால், அவர்களை குஷியாக்கும் விதமாக ஒரு செய்தி வந்துள்ளது. அதாவது, பள்ளிகள் திறந்த அதே வேகத்தில் 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.
ஆம், பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூன் 9ஆம் தேதி வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 8-ம் தேதி சனிக்கிழமையிலும், 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையிலும் வருகிறது. இதுபோக தற்போது 9ஆம் தேதியும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு 3 நாட்கள் மீண்டும் தொடர் விடுமுறை கிடைக்கும். அதேசமயம் இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில், ஜூன் 14ஆம் தேதி சனிக்கிழமை அலுவலக வேலை நாளாக கணக்கிடப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.