சென்னையில் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கத்தை துவக்கி வைத்த பின் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற 15 எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கம் இன்றும் மற்றும் நாளையும் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. சாகித்திய அகாடமி மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் சிறப்புநிலைத் தமிழ்த்துறை இணைந்து நடந்தும் இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு மலரை வெளியிடுவதில் மகிழ்ச்சி. வாழ்நாளில் 80 ஆண்டுகளை பொதுவாழ்க்கைக்கு ஒப்படைத்தவர் கலைஞர். கலைஞர் இந்திய முகமாக மாறிய நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. தொட்ட துறைகள் அனைத்திலும் கோலோச்சியவர் கலைஞர் கருணாநிதி. தனது வாழ்வையே தமிழ் சமூகத்தின் உயர்விற்காக ஒப்படைத்தவர் கலைஞர் கருணாநிதி என புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர் படைப்பாளிகளை அவர்கள் வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும் என்பதுதான் தி.மு.க. அரசின் நோக்கம். எழுத்தாளர்களை தமிழ் சமூகம் என்றும் கொண்டாட தவறியதே இல்லை. எழுத்தாளர்களை போற்றும் சமூகமே உயர்ந்த சமூகமாக இருக்க முடியும். 36 தமிழறிஞர்களின் படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.
சாகித்ய அகாடமி விருது பெறுவோருக்கு வீடு வழங்க வேண்டும் என முடிவு செய்து கனவு இல்லம் திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம். சாகித்ய அகாடமி விருது பெற்ற 10 பேருக்கு தலா ரூ.1 கோடியில் வீடு வழங்கப்பட்டது. தற்போது 15 தமிழ் அறிஞர்களுக்கு கலைஞரின் கனவு திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. எனது செங்கோலை பறிக்கலாம்.. ஆனால் எழுதுகோலை பறிக்க முடியாது என கலைஞர் கூறியதையும் நினைவு கூர்ந்தார்.
Read more: விஜயின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு .. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட முக்கிய அறிக்கை..!!